எல்லாப் பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் வரலாறு காணாத உயர்வு என்று அலறி கொண்டிருக்கிறது. BSE குறியீடு 77 புள்ளிகள் எகிறி 6,402 க்கும், NSE குறியீடு 22 புள்ளிகள் எகிறி 2,029 க்கும் வந்துள்ளது. வரலாறு காணாத உயர்வு என்று எல்லோரும் அலறும் பொழுது சாமானிய முதலீட்டாளர்களுக்கும் அச்சமும், குழப்பமுமே மேலிடுகிறது.
குறியீடு, ஒவ்வொரு கட்டத்திலும் ஸ்தரப்படுத்திக்கொண்டு அடுத்த இலக்கை நோக்கி நகர்ந்து கொண்டு தான் இருக்கும். அது கீழ் நோக்கி சரியுமா இல்லை மேல் நோக்கி உயருமா என்பது வாங்குபவர், விற்பவர் எண்ணிக்கை, பங்குகளைப் பற்றிய செய்திகள் மற்றும் நாட்டின் பொருளாதாரத்தைப் பொருத்தது. கடந்த வாரம் லாப விற்பனையால் சரிந்த சந்தை, இந்த வாரம் முதலீட்டாளர்கள் பங்குகளை வாங்குவதால் எகிறுகிறது. வரலாறு காணாத உயர்வு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை. தற்பொழுது உள்ள நிலையில் இருந்து ஒரு புள்ளி உயர்ந்தாலும், அது வரலாறு காணாத உயர்வு தான்.
நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கேற்ப பங்குச் சந்தையும் உயர்ந்து கொண்டே தான் இருக்கும். இனி உயருமா என்று கேள்வி கேட்டு கொண்டே பல உயர்வுகளை கோட்டை விட்டு விடுவோம். என்னுடைய முந்தைய பதிவில் கூறியிருந்தது போல ஒவ்வொரு சரிவிலும் நல்லப் பங்குகளை வாங்கி அடுத்த கட்ட குறியீடு உயர்வில் நாமும் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு அனலிஸ்டும் ஒரு கதை சொல்லிக் கொண்டு தான் இருப்பார்கள். ஒவ்வொரு வணிக இதழும், தொலைக்காட்சியும் தங்களது யுகங்களையும் அதற்கான காரணங்களையும் அடுக்கிக் கொண்டே தான் இருப்பார்கள். அதில் தெளிவான ஒரு முடிவு எடுப்பது நம் மனநிலையைச் சார்ந்தே அமையும்.
சரி.. இன்று எந்தப் பங்குகள் எகிறியது ?
இன்று எல்லா துறைகளிலுமே நல்ல ஏற்றம் இருந்தது. தொலைத்தொடர்பு பங்குகளான பார்தி பங்குகள், Pharma பங்குகளான ரான்பேக்சி, சன் பார்மா போன்றவை எகிறியது.
அதைப் போல சிறிது வாரங்களாக தள்ளாடிக் கொண்டிருந்த மென்பொருள் பங்குகள் எகிறத் தொடங்கியது. இன்போசிஸ், விப்ரோ போன்ற மென்பொருள் பெரும்புள்ளிகள் தவிர மிட்கேப் (MidCap) மென்பொருள் பங்குகளான ஹேக்சாவேர், ஜியோமேட்ரிக் சாப்ட்வேர் போன்ற பங்குகள் நல்ல ஏற்றம் கண்டன.
தொலைக்காட்சிப் பங்குகளான ZEE தொலைக்காட்சி பங்குகள் என்று மிக அதிக உயர்வைப் பெற்றது.
ஆட்டோப் பங்குகளான மாருதி, டாட்டா மோட்டார்ஸ், மகேந்திரா & மகேந்திரா போன்றவையும் நல்ல ஏற்றம் பெற்றன.
இன்று எல்லா துறைகளிலும் நல்ல ஏற்றம் இருந்தது.
அடுத்து வரும் நாட்களில் சந்தை எப்படியிருக்கும் ?
பங்கு விலை தற்பொழுது எகிறி உள்ளதால் லாபம் எடுப்பதற்காக முதலீட்டாளர்கள் பங்குகளை விற்க கூடும். அப்பொழுது பங்குக் குறியீடு சற்று சரியும். சந்தையை கூர்ந்து கவனித்து கொண்டே இருந்து, குறியீடு சரியும் பொழுது நல்லப் பங்குகளாக வாங்குவது நல்லது.
Wednesday, December 15, 2004
Subscribe to:
Post Comments (Atom)
1 மறுமொழிகள்:
தமிழச்சி அவர்களே, you article is really good. Can you also provided the references. நன்றி. முத்து
6:16 PM, December 19, 2004By: muthu
Post a Comment