நான் வலைப்பதிவு எழுதத் தொடங்கி மூன்று மாதங்களாகிறது. எழுதலாமா, வேண்டாமா என்ற பலமான யோசனைக்குப் பின், சரி ஆனது ஆகட்டும், தமிழ்மணம் வாசகர்கள் பாடு திண்டாட்டம் தான் என்று முடிவு செய்து இந்தப் பதிவினைத் தொடங்கினேன்.
கல்லூரியில் படிக்கும் பொழுது, எனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ஒரு கையெழுத்துப் பிரதி கொண்டுவர முடிவு செய்தோம். சில வாரங்கள் யோசித்து எழுதி, நகலிட்டு சிலப் பிரதிகளை நண்பர்களிடையே விநியோகித்தோம். அதற்கு கிடைத்த அபரிதமான வரவேற்பைப் பார்த்து, போதுமடா சாமி என்று ஒரே இதழுடன் முடித்துக் கொண்டோம். இதைப் போலவே நெய்வேலியில் நண்பர்கள் சிலருடன் ஆரம்பித்த கையெழுத்துப் பிரதிக்கும் மூடுவிழா தான்.
கடந்த காலங்களை அசைப் போட்டுக் கொண்டே தான் வலைப்பதிவைத் தொடங்கினேன். தற்பொழுது குப்பைக் கொட்டிக் கொண்டிருக்கும் ஆர்வமுள்ளத் துறையைப் பற்றி எழுதுவதே எளிதாக இருக்கும் என்ற எண்ணத்தில் தான் பங்குச் சந்தையைப் பற்றி எழுதினேன். எழுதத் தொடங்கிய பொழுது வரவேற்பு ஆரவாரமாக இருந்தாலும், பின் பின்னூட்டங்கள் குறைந்துப் போனது. பின்னூட்டம் ஊக்க சக்தியளிக்கும் டானிக் போன்றது. ஒரு பின்னூட்டம் கிடைத்தால் கூட மனதில் ஒரு சிறு சந்தோஷம் ஏற்படும். பின்னூட்டங்கள் கிடைக்காதப் பொழுது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும். ஆனால் இப்பொழுதுதெல்லாம் பின்னூட்டங்கள் கிடைக்காமல் போனால் வருத்தம் ஏற்படுவதில்லை. பழகிப் போய் விட்டது.
நமக்கு ஏன் பின்னூட்டங்கள் வருவதில்லை என்று யோசிக்கும் பொழுது நாம் எத்தனைப் பதிவுகளுக்கு பின்னூட்டம் கொடுத்துள்ளோம் என்று நினைத்துப் பார்ப்பேன். நான் பலப் பதிவுகளைப் படித்து ரசித்திருக்கிறேன். ஆனால் பின்னூட்டம் கொடுத்தது கிடையாது. நம்மைப் போலத் தானே பிறரும் இருப்பார்கள் என்று நினைத்துக் கொள்வேன். அலுவலகம், குடும்பம், படிப்பு என்று பல வேலைகளுக்கு இடையே கிடைக்கும் நேரத்தைத் தான் வலைப்பதிவிற்காகச் செலவிடுவேன். கிடைக்கும் கொஞ்ச நேரத்தில், பின்னூட்டங்களைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் ஒவ்வொரு பதிவாகப் படித்துக் கொண்டே சென்று விடுவேன். என்னைப் போலவே நிறையப் பேர் இருக்கக் கூடும்.
இந்த மனநிலைக்கு நாம் பழகிக் கொண்டால் நம்முடைய இயற்கையான கருத்துக்கள் வெளிவரத் தொடங்கும் என்றே நான் நினைக்கிறேன். பின்னூட்டங்களுக்காக எழுதும் பொழுது எழுத்தில் ஒரு செயற்கைத் தனம் தெரிகிறது. பின்னூட்டங்களைப் பெற வேண்டும் என்று எழுதப்படும் சிலப் பதிவுகளில் இந்த செயற்கைத்தனம் அப்பட்டமாகத் தெரியும். இதைப் போலவே முகமூடி அணிந்து எழுதப்படும் சில வலைப்பதிவுகள் ரசிக்கத்தக்கவையாகவே இருக்கிறது. நிஜத்தில் எழுதமுடியாமால் நிழலாக எழுதும் பொழுது கிடைக்கும் சுதந்திரம் அந்த எழுத்தில் பிரதிபலிக்கும். ஆனால் அதே சுதந்திரம் சில நேரங்களில் எல்லை மீறி அருவருப்பாகவும் இருக்கிறது.
வலைப்பதிவுகள் பெருகிக் கொண்டே இருக்கிறது. நிறையப் பதிவுகள் தனித்தன்மையுடன் வெளிவந்து கொண்டிருக்கிறது ஆரோக்கியமானச் சூழல் தான். எழுத வேண்டும் என்ற ஆவல் பலருக்கு இருக்கிறது. யார் சிறப்பாக எழுதுகிறார்கள் என்று தனிப்பட்டியலிட நான் விரும்பவில்லை. ஒவ்வொருவரின் எழுத்தும் ஒவ்வொரு பாணியில் சிறப்பாகவே இருக்கிறது.
ஆனால் இணையத்திற்குள்ளும் வராமல், புத்தகத்திற்கும் வராமல் நிறைய எழுத்துக்கள் ஆங்காங்கே மறைந்துப் போய்க் கொண்டிருக்கின்றன.
என் சொந்த ஊரான நெய்வேலியில் நிறைய எழுத்தாளர்கள் உண்டு. நெய்வேலியில் வேலைப் பார்க்கும் அவர்களில் நிறையப் பேர் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். இதைப் போலவே நெய்வேலியின் அருகிலுள்ள சில கிராமங்களைச் சேர்ந்த எழுத்தாளர்கள் சிறப்பாக எழுதுவார்கள். புத்தகங்கள் வெளியிடுமளவுக்கு அவர்களுக்கு வசதி இருக்காது.
நெய்வேலிக்கு அருகில் இருக்கும் ஒரு கிராமத்தில் என்னுடைய நண்பர் ஒருவர் இருக்கிறார்.
அருமையாகக் கவிதைகள் எழுதுவார். சினிமாவில் பாடலாசிரியராக வேண்டும் என்ற எண்ணத்தில் சென்னைக்கு வந்தார். அவரது சில முயற்சிகள் கைக்கூடிய வேளையில் சிலப் பிரச்சனைகள். நொந்துப் போய், சொந்த கிராமத்திற்கே சென்று விட்டார். இன்னும் கவிதைகள் எழுதுகிறாரா என்று தெரியவில்லை.
இவரைப் போல பலர். இவர்களுக்கு வலைப்பதிவுகள் பற்றித் தெரியாது. புத்தகங்களை வெளியிட வசதிகளும் இருக்காது. குமுதம், ஆனந்த விகடன் இதழ்களுக்கு இவர்கள் அனுப்பும் படைப்புகளும் பிரசுரமாகாது. அப் பகுதியில் வரும் சில சிற்றிதழ்களில் எழுதிக் கொண்டிருப்பார்கள். வாழ்க்கைப் போராட்டத்திற்கிடையேயும், கிராமத்து ரசனையில் அவர்களின் எழுத்து மிகச் சிறப்பாக இருக்கும். ஆனால் வாழ்க்கைப் போராட்டத்தில் சில காலங்களில் அந்த எழுத்து மறைந்துப் போய் விடுகிறது.
பி.கு: தமிழ்மணத்தின் "இந்த வார நட்சத்திரத்திற்காக" எழுதியது
மேலும் படிக்க
Saturday, January 08, 2005
காணாமல் போகும் எழுத்துக்கள்
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/08/2005 12:32:00 PM 4 comments:
Friday, January 07, 2005
ஹர்ஷத் மேத்தா - 2
பங்குச் சந்தையைப் பற்றி உங்களுக்குத் தெரியும். பணச் சந்தையைப் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா ?
பணச் சந்தை (Money Market) எனப்படுவது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (Financial Institutions) கடன் வாங்க/கொடுக்க ஏற்படுத்தப்பட்ட சந்தை. இது குறைந்த காலத் தேவைகளுக்காக பணத்தை பரிமாறும் ஒரு இடம் என்று சொல்லலாம். அதிகபட்சமாக ஒரு வருடம், குறைந்தபட்சமாக ஒரு நாள் கூட கடன் வாங்கலாம்/கொடுக்கலாம். தங்களிடமிருக்கும் மிகுதியானப் பணத்தை வங்கிகள் இந்தச் சந்தையில் கடன் கொடுத்து வட்டி மூலமாக லாபம் அடையும். பணச் சந்தையில் கடன் பெறுவதற்கும்/கொடுப்பதற்க்கும் பல வழிகள் இருக்கின்றது. Call Money, Term Money, T-bills, Repo என்று பல வெவ்வேறு முறைகளில் வர்த்தகம் நடைபெறும் (இதற்கெல்லாம் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே தொடருவோம்).
இதில் Repo அல்லது Ready Forward Contracts என்ற கடன் பெறும் முறையை மட்டும் கவனிப்போம். ஏனெனில் நம்முடைய வில்லன் ஹர்ஷத் மேத்தாவின் புண்ணியத்தால் இதிலிருந்தப் பல ஓட்டைகள் வெளியுலகிற்கு தெரியவந்தது.
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள அரசுக் கடன்பத்திரங்களை பணச் சந்தையில் விற்று, தங்களின் குறுகிய காலத் தேவைக்காகப் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதனை மறுபடியும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஓப்பந்தம் செய்து கொள்ளப்படும்.
அதாவது, பத்திரங்களை விற்பவர், அதனை மறுபடியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பப்பெற்றுக் கொள்வதற்கும் சேர்த்தே ஒப்பந்தம் செய்வார். தற்பொழுது விற்கும் விலையையும், திரும்பப்பெற்றுக் கொள்ளும் விலையையும் முதலிலேயே தீர்மானித்து அதற்கேற்ப தான் ஒப்பந்தம் செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், பறிமாறப்படும் பணத்திற்கு, ரெப்போ விகிதம் (Repo rate) என்று சொல்லப்படும் வட்டி வசூலிக்கப்படும். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதை திரும்பப் பெற்று கொள்வதற்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்படுவதால் இதனை Repurchase Agreement (Repo) என்று சொல்வார்கள்.
வங்கிகள், தங்களின் குறைந்தகாலத் தேவைக்கு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் சில கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தான் இந்த ரெப்போ வர்த்தகம் மூலம் பணச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றன.
சரி..வங்கிகள் எப்படி செயல்படுகின்றன. வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலமாக பணம் திரட்டுதல். திரட்டியப் பணத்தைக் கொண்டு கடன் வழங்குதல்.
ஆனால் தங்களிடம் இருக்கும் அனைத்துப் பணத்தையும் வங்கிகள் கடன் கொடுப்பதை ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தைக் கையிருப்பாக ஒவ்வொரு வங்கியும் தங்களிடமோ அல்லது ரிசர்வ் வங்கியில் உள்ள தங்கள் கணக்கிலோ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனை Cash Reserve Ratio (CRR) என்று சொல்வார்கள். இவ்வாறு கையிருப்பாக வைத்திருப்பதால் பயனாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு உடனடி தேவையிருக்கும் பொழுது எளிதில் பணம் கிடைக்கும் (இதனால் தான் வங்கி வைப்பு நிதியில் நாம் எப்பொழுது கேட்டாலும் உடனே பணம் திரும்பக் கிடைக்கிறது).
இதைப் போலவே பணமாக இல்லாமல் தங்கமாகவோ, அரசு கடன் பாத்திரங்களாகவே மற்றொரு குறிப்பிட்ட சதவீதம் வங்கிகளின் கையிருப்பில் இருக்க வேண்டும். இதனை Statutory Liquidity Ratio (SLR) என்று சொல்வார்கள். பொதுவாக வங்கிகளுக்கு இருக்கும் பணத்தேவை, கடன் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இவ்வாறு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி.
வங்கிகள், தங்களிடம் கையிருப்பில் இருக்கும் SLR விகிதம் குறையும் பொழுது அதனைச் சரி செய்ய புதிதாக கடன்பத்திரங்கள் வாங்குவதை விட ரெப்போ மூலம் குறுகியக் காலத்திற்கு கடன்பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இவ்வாறு பத்திரங்களை வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஒன்றுச் சேர்ப்பது தான்
தரகர்களின் வேலை. ஒப்பந்தம் வங்கிகளுக்கிடையே செய்யப்படும். பத்திரங்களையும் பணத்தையும் வங்கிகள் தான் பறிமாறிக் கொள்ள வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால் இங்கே தான் சில விதிமீறல்கள் நடைபெறத் தொடங்கின.
பத்திரங்களை விற்பவர்கள், பத்திரங்களை நேரடியாக வாங்குபவர்களிடம் கொடுக்காமல் தரகர்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதைப் போலவே பணத்திற்கான காசோலை நேரடியாக பத்திரங்களை விற்றவர்களிடம் செல்லாமல் தரகர்கள் வழியாக செல்லத் தொடங்கியது.
இவ்வாறு பத்திரங்களும் காசோலைகளும் தரகர்கள் மூலமாகவே வங்கிகளுக்கு செல்லத் தொடங்கியது. இதில் ஒன்றும் தவறு இல்லை. தரகர்களைக் கொண்டு தான் வர்த்தகத்தை நடத்த முடியும். வங்கிகளுக்கும் இந்த முறையில் வசதி இருந்தது. வங்கிகளின் தேவையை தரகர்களால் எளிதாகப் பூர்த்திச் செய்யமுடிந்தது. இந்தியாவில் எங்குமே காணப்படும் சாதாரணமான விதிமீறல்.
ஆனால் ஹர்ஷ்த் மேத்தாவின் கிரிமினல் மூளை இதிலிருந்த ஓட்டைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது, இருந்த நரசிம்மராவ் அரசு, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்த நேரம். இனி தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் வசந்தகாலம் தான் என்ற எண்ணத்தில் பங்குச் சந்தை உயரத் தொடங்கியது. இந்தக் காளைச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.
சந்தை உயருவதாலும், லாபம் நிறையக் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் தரகர்களும், முதலீட்டு நிறுவனங்களும் பணச் சந்தையில் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டிருந்தனர். பணச் சந்தையில் புரளும் கோடிக்கணக்கானப் பணத்தை பங்குச் சந்தைக்கு கொண்டு வந்து விட்டால், பல மடங்கு லாபம் பார்க்கலாம்.
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவிற்கு இதிலிருந்த ஓட்டைகளும் வாய்ப்புகளும் புரிபடத் தொடங்கியது.
மேலும் படிக்க
பணச் சந்தை (Money Market) எனப்படுவது வங்கிகளும், நிதி நிறுவனங்களும் (Financial Institutions) கடன் வாங்க/கொடுக்க ஏற்படுத்தப்பட்ட சந்தை. இது குறைந்த காலத் தேவைகளுக்காக பணத்தை பரிமாறும் ஒரு இடம் என்று சொல்லலாம். அதிகபட்சமாக ஒரு வருடம், குறைந்தபட்சமாக ஒரு நாள் கூட கடன் வாங்கலாம்/கொடுக்கலாம். தங்களிடமிருக்கும் மிகுதியானப் பணத்தை வங்கிகள் இந்தச் சந்தையில் கடன் கொடுத்து வட்டி மூலமாக லாபம் அடையும். பணச் சந்தையில் கடன் பெறுவதற்கும்/கொடுப்பதற்க்கும் பல வழிகள் இருக்கின்றது. Call Money, Term Money, T-bills, Repo என்று பல வெவ்வேறு முறைகளில் வர்த்தகம் நடைபெறும் (இதற்கெல்லாம் தமிழில் என்ன பெயர் என்று தெரியவில்லை. அதனால் ஆங்கிலத்திலேயே தொடருவோம்).
இதில் Repo அல்லது Ready Forward Contracts என்ற கடன் பெறும் முறையை மட்டும் கவனிப்போம். ஏனெனில் நம்முடைய வில்லன் ஹர்ஷத் மேத்தாவின் புண்ணியத்தால் இதிலிருந்தப் பல ஓட்டைகள் வெளியுலகிற்கு தெரியவந்தது.
வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்களிடம் உள்ள அரசுக் கடன்பத்திரங்களை பணச் சந்தையில் விற்று, தங்களின் குறுகிய காலத் தேவைக்காகப் பணத்தை பெற்றுக் கொள்வார்கள். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதனை மறுபடியும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கும் ஓப்பந்தம் செய்து கொள்ளப்படும்.
அதாவது, பத்திரங்களை விற்பவர், அதனை மறுபடியும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் திரும்பப்பெற்றுக் கொள்வதற்கும் சேர்த்தே ஒப்பந்தம் செய்வார். தற்பொழுது விற்கும் விலையையும், திரும்பப்பெற்றுக் கொள்ளும் விலையையும் முதலிலேயே தீர்மானித்து அதற்கேற்ப தான் ஒப்பந்தம் செய்யப்படும். இந்த இடைப்பட்ட காலத்தில், பறிமாறப்படும் பணத்திற்கு, ரெப்போ விகிதம் (Repo rate) என்று சொல்லப்படும் வட்டி வசூலிக்கப்படும். பத்திரங்களை விற்கும் பொழுதே, அதை திரும்பப் பெற்று கொள்வதற்கும் சேர்த்து ஒப்பந்தம் செய்யப்படுவதால் இதனை Repurchase Agreement (Repo) என்று சொல்வார்கள்.
வங்கிகள், தங்களின் குறைந்தகாலத் தேவைக்கு மட்டுமல்லாமல், ரிசர்வ் வங்கியின் சில கட்டுப்பாடுகளையும் பின்பற்றத் தான் இந்த ரெப்போ வர்த்தகம் மூலம் பணச் சந்தையில் வர்த்தகம் செய்கின்றன.
சரி..வங்கிகள் எப்படி செயல்படுகின்றன. வைப்பு நிதி மற்றும் சேமிப்புக் கணக்குகள் மூலமாக பணம் திரட்டுதல். திரட்டியப் பணத்தைக் கொண்டு கடன் வழங்குதல்.
ஆனால் தங்களிடம் இருக்கும் அனைத்துப் பணத்தையும் வங்கிகள் கடன் கொடுப்பதை ரிசர்வ் வங்கி அனுமதிப்பதில்லை. ஒரு குறிப்பிட்ட சதவீத பணத்தைக் கையிருப்பாக ஒவ்வொரு வங்கியும் தங்களிடமோ அல்லது ரிசர்வ் வங்கியில் உள்ள தங்கள் கணக்கிலோ கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இதனை Cash Reserve Ratio (CRR) என்று சொல்வார்கள். இவ்வாறு கையிருப்பாக வைத்திருப்பதால் பயனாளர்களின் சேமிப்பு பாதுகாக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், அவர்களுக்கு உடனடி தேவையிருக்கும் பொழுது எளிதில் பணம் கிடைக்கும் (இதனால் தான் வங்கி வைப்பு நிதியில் நாம் எப்பொழுது கேட்டாலும் உடனே பணம் திரும்பக் கிடைக்கிறது).
இதைப் போலவே பணமாக இல்லாமல் தங்கமாகவோ, அரசு கடன் பாத்திரங்களாகவே மற்றொரு குறிப்பிட்ட சதவீதம் வங்கிகளின் கையிருப்பில் இருக்க வேண்டும். இதனை Statutory Liquidity Ratio (SLR) என்று சொல்வார்கள். பொதுவாக வங்கிகளுக்கு இருக்கும் பணத்தேவை, கடன் போன்றவற்றில் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தை இவ்வாறு கையிருப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது ரிசர்வ் வங்கியின் விதி.
வங்கிகள், தங்களிடம் கையிருப்பில் இருக்கும் SLR விகிதம் குறையும் பொழுது அதனைச் சரி செய்ய புதிதாக கடன்பத்திரங்கள் வாங்குவதை விட ரெப்போ மூலம் குறுகியக் காலத்திற்கு கடன்பத்திரங்களை வாங்கிக் கொள்ளும். இவ்வாறு பத்திரங்களை வாங்குபவர்களையும், விற்பவர்களையும் ஒன்றுச் சேர்ப்பது தான்
தரகர்களின் வேலை. ஒப்பந்தம் வங்கிகளுக்கிடையே செய்யப்படும். பத்திரங்களையும் பணத்தையும் வங்கிகள் தான் பறிமாறிக் கொள்ள வேண்டும். இது தான் நடைமுறை. ஆனால் இங்கே தான் சில விதிமீறல்கள் நடைபெறத் தொடங்கின.
பத்திரங்களை விற்பவர்கள், பத்திரங்களை நேரடியாக வாங்குபவர்களிடம் கொடுக்காமல் தரகர்களிடம் கொடுக்கத் தொடங்கினார்கள். அதைப் போலவே பணத்திற்கான காசோலை நேரடியாக பத்திரங்களை விற்றவர்களிடம் செல்லாமல் தரகர்கள் வழியாக செல்லத் தொடங்கியது.
இவ்வாறு பத்திரங்களும் காசோலைகளும் தரகர்கள் மூலமாகவே வங்கிகளுக்கு செல்லத் தொடங்கியது. இதில் ஒன்றும் தவறு இல்லை. தரகர்களைக் கொண்டு தான் வர்த்தகத்தை நடத்த முடியும். வங்கிகளுக்கும் இந்த முறையில் வசதி இருந்தது. வங்கிகளின் தேவையை தரகர்களால் எளிதாகப் பூர்த்திச் செய்யமுடிந்தது. இந்தியாவில் எங்குமே காணப்படும் சாதாரணமான விதிமீறல்.
ஆனால் ஹர்ஷ்த் மேத்தாவின் கிரிமினல் மூளை இதிலிருந்த ஓட்டைகள் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தது.
அப்பொழுது, இருந்த நரசிம்மராவ் அரசு, நிதியமைச்சர் மன்மோகன் சிங் தலைமையில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை ஆரம்பித்திருந்த நேரம். இனி தனியார் நிறுவனங்களுக்கும், இந்தியப் பொருளாதாரத்திற்கும் வசந்தகாலம் தான் என்ற எண்ணத்தில் பங்குச் சந்தை உயரத் தொடங்கியது. இந்தக் காளைச் சந்தையில் முதலீடு செய்வதற்கு நிறையப் பணம் தேவைப்பட்டது.
சந்தை உயருவதாலும், லாபம் நிறையக் கிடைக்கும் என்ற எண்ணத்திலும் தரகர்களும், முதலீட்டு நிறுவனங்களும் பணச் சந்தையில் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்து கொண்டிருந்தனர். பணச் சந்தையில் புரளும் கோடிக்கணக்கானப் பணத்தை பங்குச் சந்தைக்கு கொண்டு வந்து விட்டால், பல மடங்கு லாபம் பார்க்கலாம்.
கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தாவிற்கு இதிலிருந்த ஓட்டைகளும் வாய்ப்புகளும் புரிபடத் தொடங்கியது.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/07/2005 02:45:00 PM 4 comments:
Thursday, January 06, 2005
ஹர்ஷத் மேத்தா - 1
சாணக்கியக் காளையின் வில்லங்கக் கதை - 1
தற்பொழுது சில மாதங்களாக பங்குச் சந்தை எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது அனைவருக்கும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. சந்தை உண்மையிலேயே உயர்ந்து கொண்டிருக்கிறதா இல்லை உயர்த்தப்படுகிறதா என்ற சந்தேகமே அனைவரது மனதிலும் எழுந்தது. SEBI சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. RBI சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் ? எதனால் ?
இத்தகைய காளைச் சந்தையில் பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள், அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.
பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ? அதற்குப் பிறகு தான் SEBI கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது.
சாதாரணக் காசாளராக, நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று சுமார் 300 ரூபாயாக இருக்கும் ACC பங்குகளை 10,000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ், TISCO என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40% சரிந்தது. விலை உயர்த்துப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டது. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல (நல்ல) தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான (சிலருக்கு கோடிக்கணக்கான) நஷ்ட்டத்தைக் கண்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
இது எப்படி ஏற்பட்டது. இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.
1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த BSE குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து, பங்குகளை ஆய்வு செய்து, அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் "Big Bull". அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க, மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் (பங்குச் சந்தை உயர்வும், தாழ்வும், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும்,
கரடிகள் சரிவையும் குறிக்கும்)
இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை, மிகக் குறுகிய காலத்தில், அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக Financial Express மற்றும் Rediff இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில், ஹர்ஷத் மேத்தாவே, கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான்.
சாதாரணக் காசாளராக இருந்து, பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா, அப்பொழுது தான்
உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் (Toyota Lexus) காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய
அதிகப் பணம் தேவைப்பட்டது. கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.
ஏப்ரல் 23, 1992 சுசித்தா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) மாயமாய் மறைந்துப் போனதையும், ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும், பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் Securities Scam கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.
ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் "இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்" என்று சொன்னானாம்.
அந்தச் சுவாரசியமானக் கதையை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.
மேலும் படிக்க
தற்பொழுது சில மாதங்களாக பங்குச் சந்தை எதைக் குறித்தும் பொருட்படுத்தாமல் எகிறிக் கொண்டே இருந்தப் பொழுது அனைவருக்கும் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது. சந்தை உண்மையிலேயே உயர்ந்து கொண்டிருக்கிறதா இல்லை உயர்த்தப்படுகிறதா என்ற சந்தேகமே அனைவரது மனதிலும் எழுந்தது. SEBI சந்தையின் மீது தனது கண்காணிப்பை அதிகப்படுத்தியது. RBI சிலக் கட்டுப்பாடுகளை விதித்தது. பலச் சிறிய நிறுவனங்களின் பங்குகளை டெலிவரி எடுத்தே ஆக வேண்டும் என்று சூழலை ஏற்ப்படுத்தியது. ஏன் ? எதனால் ?
இத்தகைய காளைச் சந்தையில் பங்குகளின் விலையை வேண்டுமென்றே சிலர் அதிகப்படுத்தக்கூடும் என்ற அச்சமே இதற்குக் காரணம். சிலப் பங்குத் தரகர்கள், அடிப்படையே இல்லாதப் பங்குகளை அதிக அளவில் வாங்கி, விலையேற்றி, நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்களை அந்தப் பங்குகள் நோக்கி கவர்ந்திழுப்பார்கள். நாமும் பங்குகள் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறதே என்று ஆசைப்பட்டு, அந்தப் பங்குகளை வாங்குவோம். விலை எகிறியதும் அந்தப் பங்குகளை தரகர்கள் விற்று விடுவார்கள். பங்குகளின் விலை சரியும். நாம் முட்டாளாக்கப்படுவோம். இதைத் தடுக்கத் தான் இத்தகைய கண்காணிப்பு.
பங்குகளின் விலையை இவ்வாறு உயர்த்தும் டெக்னிக்கை இந்தியப் பங்குச் சந்தைக்கு முதலில் அறிமுகப்படுத்தியவன் ஹர்ஷத் மேத்தா ? அதற்குப் பிறகு தான் SEBI கட்டுப்பாடுகளை விதித்து சந்தையை கவனிக்கத் தொடங்கியது.
சாதாரணக் காசாளராக, நியு இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் பணிபுரிந்துக் கொண்டிருந்த ஹர்ஷத் மேத்தா, இந்தியாவின் மிகப் பிரபலமான பங்குத் தரகராக உருமாறியக் கதைக்கு பின் அரசியல்வாதிகளின் ஊழல் போல் வெறும் வில்லத்தனம் மட்டுமில்லை. தன் மூளையை உபயோகப்படுத்தி இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் இருந்தப் பல ஓட்டைகளைப் பயன்படுத்தி பலப் பங்குகளை விலை உயரச் செய்தவன். இன்று சுமார் 300 ரூபாயாக இருக்கும் ACC பங்குகளை 10,000 ரூபாய்க்கு அதிகரிக்கச் செய்தவன். இது போல ரிலயன்ஸ், TISCO என்று பலப் பங்குகள். பங்குச் சந்தையை உயர வைத்த அந்தக் கதை மிக சுவரசியமானது என்றாலும் அதன் பின் விளைவுகள் மிக மோசமாக இருந்தது. இந்த ஊழலுக்குப் பிறகு குறியீடுகள் சுமார் 40% சரிந்தது. விலை உயர்த்துப் பட்ட பங்குகள் வர்த்தகத்திற்கு தகுதியற்றவையாக அறிவிக்கப்பட்டது. பல சாதாரண நடுத்தர வர்க்க மக்களின் சேமிப்புகள் கரைந்துப்போயின. பல (நல்ல) தரகர்கள் தங்களுக்கு ஏற்ப்பட்ட லட்சக்கணக்கான (சிலருக்கு கோடிக்கணக்கான) நஷ்ட்டத்தைக் கண்டு தற்கொலை செய்து கொண்டார்கள்.
இது எப்படி ஏற்பட்டது. இதிலிருந்த ஓட்டைகள் என்ன ? 1992ம் வருடத்தைக் கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம் என்று தோன்றியது.
1991 பிப்ரவரி மாதத்தில் 1000மாக இருந்த BSE குறியீடு மார்ச் 1992ல் 4500ஐ எட்டியது. சில மாதங்களில் பெரும் வளர்ச்சி. ஹர்ஷத் மேத்தா பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக கருதப்பட்டார். பல வணிக இதழ்களின் அட்டைப்படத்தை அலங்கரித்தார். பங்குச் சந்தையின் மாபெரும் உயர்வை கணித்து, பங்குகளை ஆய்வு செய்து, அவர் முதலீடு செய்ததாகவே அனைவரும் கருதினர். அவருக்கு அப்பொழுது சூட்டப்பட்ட பட்டப்பெயர் "Big Bull". அவர் முதலீடு செய்திருந்தப் பங்குகள் அனைத்தும் விண்முட்ட உயர்ந்திருந்த நேரம். யாருக்கும் அதன் பிண்ணனியில் இருந்த ஊழல்கள் தெரியவில்லை. அப்படிக் கூட செய்ய முடியுமா என்று அனைவரையும் பின்பு புருவங்களை உயர்த்த வைத்த நிகழ்வு. பங்குச் சந்தையை தான் வெற்றிக் கொண்டதாக சிம்பாலிக்காக காண்பிக்க, மும்பை மிருகக்காட்சிசாலையில் உள்ளக் கரடிகளுக்கு அவன் வேர்கடலைக் கொடுத்து புகைப்படங்களுக்கும், வீடியோக்களுக்கும் போஸ் கொடுத்தான் (பங்குச் சந்தை உயர்வும், தாழ்வும், காளைகளுக்கும் கரடிகளுக்கும் இடையே நடக்கும் சண்டை என்று சொல்வார்கள். காளைகள் உயர்வையும்,
கரடிகள் சரிவையும் குறிக்கும்)
இந்தப் புகழ் தான் ஹர்ஷத் மேத்தாவைக் காட்டிக் கொடுத்தது. எப்படி பங்குகளின் விலை, மிகக் குறுகிய காலத்தில், அந்த நிறுவனங்களின் அடிப்படைக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் உயருகிறது என்று சில பத்திரிக்கையாளர்களுக்குத் தோன்றியது. குறிப்பாக Financial Express மற்றும் Rediff இணையத் தளத்தில் தற்பொழுது வணிகப் பத்திகள் எழுதும் சுசித்தா தலாலுக்கு இந்த எண்ணம் வலுத்தது. பின்னாளில், ஹர்ஷத் மேத்தாவே, கரடிகளுக்கு வேர்கடலை கொடுக்கும் செயலை தான் செய்யாமல் இருந்திருந்தால் சிக்கியிருக்கவே மாட்டேன் என்று கூறியிருக்கிறான்.
சாதாரணக் காசாளராக இருந்து, பங்குச் சந்தையின் சூப்பர் ஸ்டாராக மாறிய அவனது கண்களைப் புகழ் போதை மறைத்தது. சிலர் அவனைக் கூர்ந்து கவனிக்கத் தொடங்கியதை அறியாத ஹர்ஷத் மேத்தா, அப்பொழுது தான்
உலகச் சந்தையிலேயே புதிதாக அறிமுகமாகி இருந்த டோயோட்டா லேக்சஸ் (Toyota Lexus) காரை இந்தியாவிற்கு இறக்குமதி செய்து பந்தாவாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு வந்துப் போய்க் கொண்டிருந்தான். அந் நாளில் இத்தகையக் கார்களை இறக்குமதி செய்ய
அதிகப் பணம் தேவைப்பட்டது. கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த சுசித்தா தலாலுக்கு பொறித் தட்டியது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவையும் ஹர்ஷத் மேத்தாவின் தொடர்புகளையும் ஆராயத் தொடங்கினார்.
ஏப்ரல் 23, 1992 சுசித்தா தலால், டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழில், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் பலக் கோடி மதிப்புள்ள அரசு கடன் பத்திரங்கள் (Government Securities) மாயமாய் மறைந்துப் போனதையும், ஹர்ஷத் மேத்தாவின் தொடர்பையும் அம்பலப்படுத்தினார். நரசிம்மராவ் அரசையும், பங்குச் சந்தையையும் கிடுகிடுக்க வைக்கக்கூடியக் Securities Scam கதை உலகிற்கு தெரியவந்தது. இந்தியப் பங்குச் சந்தையிலும், பணச் சந்தையிலும் யாருமே அதுவரை நினைத்துப் பார்த்திராத ஊழல்.
ஹர்ஷத் மேத்தாவே சுசித்தா தலாலிடம் "இந்தியப் பங்குச் சந்தையின் மாபெரும் ரகசியக் கதையை உடைத்து விட்டீர்கள். வாழ்த்துக்கள்" என்று சொன்னானாம்.
அந்தச் சுவாரசியமானக் கதையை அடுத்து வரும் பதிவுகளில் பார்ப்போம்.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/06/2005 11:29:00 AM 6 comments:
Wednesday, January 05, 2005
Who Moved my Cheese
இந்தப் புத்தகத்தைப் படித்திருக்கிறீர்களா ? ஸ்பென்சர் ஜான்சனால் எழுதப்பட்ட புத்தகம். பல மேலாண்மை நூல்களை எழுதியுள்ள ஸ்பென்சர் ஜான்சன், மெலிதாக இழையோடும் ஒரு கதையைக் கொண்டு, வாழ்க்கையில் ஏற்ப்படும் மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது என்பதை அனைவரும் புரிந்து கொள்ளும்படி மிக எளிதாக எழுதியிருக்கிறார்.
நாம் அனைவருமே வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் எத்தனை மாற்றங்களை மிகவும் திடமாக எதிர்கொள்கிறோம் ? பல மாற்றங்களைக் கண்டு அஞ்சி ஓடிக் கொண்டே தான்இருப்போம். எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், இருக்கின்ற நிலையிலேயே காலத்தை ஓட்டுவதைத் தான் பெரும்பாலானோர்கள் விரும்புகின்றனர். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான், நீங்கள் எனப் பெருவாரியான மக்கள் இப்படித் தான் உள்ளோம்.
நம்முடைய கேரியரின் (career) துவக்கத்தில் நல்ல வேலையைத் தேடி அலைவோம். அந்த வேலைக் கிடைத்து விட்டால், அதனைச் சுகமாக அனுபவிக்கத் தொடங்கி விடுவோம். அடுத்தக் கட்டத்தைப் பற்றி யோசிப்பவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்கள் கூட திருமணத்திற்குப் பிறகு வேலை மாற்றங்களை அதிகம் விரும்புவதில்லை. மாற்றங்கள் நம்மை சறுக்கி விடுமோ, இருக்கின்ற நிலையில் இருந்து பிசகி விடுவோமோ என்ற பயத்திலும், அச்சத்திலும் தான் மாற்றங்களை கண்டு அஞ்சி ஓடி விடுகிறோம். இருக்கின்ற வேலையிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, நமக்கு நாமே பலக் காரணங்களை கற்பித்துக் கொண்டு குண்டு சட்டி ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
வேலை மாற்றம் என்று மட்டுமில்லாமல், நம் வேலையில் எதிர்கொள்ளும் பலப் பிரச்சனைகள், நிறுவனத்தில் நமக்கு மிகவும் பிடித்தத் துறையில் இருந்து பிடிக்காத துறைக்கு மாறும் பொழுது நாம் எதிர்கொள்ளும் மாற்றங்கள், பணியிட மாற்றங்கள் என வாழ்க்கையின் எந்த மாற்றத்தையும் எப்படி எதிர்கொள்வது என்பதை இக் கதை எளிதாக விளக்குகிறது.
இந்த மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது. மாற்றங்கள் எவ்வாறு வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு குட்டிக் கதையைக் கொண்டு ஸ்பென்சர் ஜான்சன் விளக்கியிருக்கிறார். மாற்றங்களை Cheese என உருவகப்படுத்திக் கொண்டு, ஒரு
அம்புலிமாமா கதையைக் கொண்டு, நமக்கு மிகவும் பிடித்த Cheese ஐ யாராவது எடுத்துக் கொண்டாலோ, அல்லது, நமக்கு மிகவும் பிடித்த Cheese க்கு பதிலாக புதிய Cheese வைக்கப்பட்டாலோ எப்படி அதை எதிர்கொள்வது என்று கதையின் போக்கிலேயே விளக்குகிறார்.
இதைப் போலக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் பெரும்பாலும் தத்துவமழை பொழிந்து படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தும். ஆனால் இந்தப் புத்தகமோ, சிறுவர் கதைப் போல ஒரு கதையைக் கொண்டு, அதுவும் சுமார் 50 பக்கங்களை மட்டுமே கொண்டு சொல்ல வந்தக் கருத்தை மிகத் தெளிவாக விளக்குவது சிறப்பு.
இக் கதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
மேலும் படிக்க
நாம் அனைவருமே வாழ்க்கையில் பல மாற்றங்களை எதிர்கொள்கிறோம். ஆனால் எத்தனை மாற்றங்களை மிகவும் திடமாக எதிர்கொள்கிறோம் ? பல மாற்றங்களைக் கண்டு அஞ்சி ஓடிக் கொண்டே தான்இருப்போம். எந்த ஒரு மாற்றமும் இல்லாமல், இருக்கின்ற நிலையிலேயே காலத்தை ஓட்டுவதைத் தான் பெரும்பாலானோர்கள் விரும்புகின்றனர். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான், நீங்கள் எனப் பெருவாரியான மக்கள் இப்படித் தான் உள்ளோம்.
நம்முடைய கேரியரின் (career) துவக்கத்தில் நல்ல வேலையைத் தேடி அலைவோம். அந்த வேலைக் கிடைத்து விட்டால், அதனைச் சுகமாக அனுபவிக்கத் தொடங்கி விடுவோம். அடுத்தக் கட்டத்தைப் பற்றி யோசிப்பவர்கள் மிகவும் குறைவு. ஆரம்பத்தில் பல நிறுவனங்களுக்கு தாவிக் கொண்டே இருப்பவர்கள் கூட திருமணத்திற்குப் பிறகு வேலை மாற்றங்களை அதிகம் விரும்புவதில்லை. மாற்றங்கள் நம்மை சறுக்கி விடுமோ, இருக்கின்ற நிலையில் இருந்து பிசகி விடுவோமோ என்ற பயத்திலும், அச்சத்திலும் தான் மாற்றங்களை கண்டு அஞ்சி ஓடி விடுகிறோம். இருக்கின்ற வேலையிலேயே ஒட்டிக் கொண்டிருப்பதற்கு, நமக்கு நாமே பலக் காரணங்களை கற்பித்துக் கொண்டு குண்டு சட்டி ஓட்டிக் கொண்டிருக்கிறோம்.
வேலை மாற்றம் என்று மட்டுமில்லாமல், நம் வேலையில் எதிர்கொள்ளும் பலப் பிரச்சனைகள், நிறுவனத்தில் நமக்கு மிகவும் பிடித்தத் துறையில் இருந்து பிடிக்காத துறைக்கு மாறும் பொழுது நாம் எதிர்கொள்ளும் மாற்றங்கள், பணியிட மாற்றங்கள் என வாழ்க்கையின் எந்த மாற்றத்தையும் எப்படி எதிர்கொள்வது என்பதை இக் கதை எளிதாக விளக்குகிறது.
இந்த மாற்றங்களை எப்படி எதிர்கொள்வது. மாற்றங்கள் எவ்வாறு வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கிறது என்பதை மிகத் தெளிவாக, எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் ஒரு குட்டிக் கதையைக் கொண்டு ஸ்பென்சர் ஜான்சன் விளக்கியிருக்கிறார். மாற்றங்களை Cheese என உருவகப்படுத்திக் கொண்டு, ஒரு
அம்புலிமாமா கதையைக் கொண்டு, நமக்கு மிகவும் பிடித்த Cheese ஐ யாராவது எடுத்துக் கொண்டாலோ, அல்லது, நமக்கு மிகவும் பிடித்த Cheese க்கு பதிலாக புதிய Cheese வைக்கப்பட்டாலோ எப்படி அதை எதிர்கொள்வது என்று கதையின் போக்கிலேயே விளக்குகிறார்.
இதைப் போலக் கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் பெரும்பாலும் தத்துவமழை பொழிந்து படிப்பவர்களுக்கு அலுப்பு ஏற்படுத்தும். ஆனால் இந்தப் புத்தகமோ, சிறுவர் கதைப் போல ஒரு கதையைக் கொண்டு, அதுவும் சுமார் 50 பக்கங்களை மட்டுமே கொண்டு சொல்ல வந்தக் கருத்தை மிகத் தெளிவாக விளக்குவது சிறப்பு.
இக் கதை தமிழில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/05/2005 12:31:00 PM 5 comments:
சரிவு, சரிவு, கடும் சரிவு
கடந்த சில வாரங்களாகவே பங்குச் சந்தை எதைப் பற்றியும் கவலைப்படாமல் எகிறிக் கொண்டே இருந்தது. இந்தக் காளைச் சந்தை சரியும் வாய்ப்பு இருப்பதாகவே அனைவரும் கருதினர். ஆனால் எந்த ஒரு பெரியச் சரிவையும் சந்தை எதிர்கொள்ளவே இல்லை. எனது நேற்றையப் பதிவில் கூறியிருந்ததைப் போல அதிக அளவில் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்ட சந்தை, நேற்று 28 புள்ளிகள் மட்டுமே சரிந்தது.
ஆனால் இன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் மிஞ்சி சந்தை கடுமையயகச் சரிந்து விட்டது. அவ்வப்பொழுது, சந்தையில் ஓரளவிற்குச் சரிவிருக்கும் என்று எண்ணியதற்கு மாறாக ஒரு கட்டத்தில் BSE குறியீடு சுமார் 300 புள்ளிகள் (Intraday) சரிவடைந்திருந்தது. இறுதியாக BSE குறியீடு 6458 (192 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும், NSE 2025 (78 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. இந்தச் சரிவு பாரதிய ஜனதா தோல்விக்குப் பிறகு பங்குச் சந்தையின் கறுப்பு தினம் என்று சொல்லப்படும் 2004, மே 17ல் நடந்த சரிவிற்க்குப் பிறகு நடந்துள்ள மிகப் பெரியச் சரிவு. ஆனால் கடந்த முறை நடந்தச் சரிவு போல் இல்லாமல், முதலீட்டாளர்களின் லாபவிற்பனைக் (Profit Booking) காரணமாகத் தான் சந்தை சரிந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே குறியீடுகள் சரியத் தொடங்கின. உலோகப் பங்குகளான Hindalco, NALCO, TISCO போன்றவை சரியத்தொடங்கின. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange - LME) உலோகங்களின் விலை சரிவடைந்ததையடுத்து இந்தப் பங்குகளும் சரியத்தொடங்கின. மென்பொருள் நிறுவனங்களுக்கு வரும் காலாண்டில் லாபம் குறையக் கூடும் என்ற எதிர்ப்பர்ர்பு காரணமாக மென்பொருள் பங்குகளையும் முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கினர்.
இது தவிர பங்குகளின் விலை உச்ச நிலையில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இந்த லாப விற்பனையால் எல்லாப் பங்குகளுமே குறிப்பிடத்தக்க அளவில் சரியத் தொடங்கின. இந்தச் சரிவு எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. எல்லாத் துறைப் பங்குகளுமே கடும் சரிவை எதிர்கொண்டன.
இன்று குறியீட்டில் இருந்த அனைத்து பங்குகளுமே சரிவடைந்திருந்ததன. BSE குறியீட்டில் எந்தப் பங்குகளுமே உயரவில்லை. NSEல் டாபர் (Dabur) பங்கு மட்டும் 1.8% உயர்வடைந்தது. குறியீட்டுப் பங்குகள் தவிர ஏனையப் பங்குகளையும் இந்தச் சரிவு விட்டுவைக்க வில்லை. சுமார் 2019 பங்குகள் சரிவடைந்த நிலையில் 319 பங்குகள் மட்டுமே உயர்வடைந்ததைக் கொண்டு சந்தை
எந்தளவுக்குச் சரிவைடைந்துள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம்.
காலையில் சரிவடைந்தச் சந்தை அச் சரிவில் இருந்து மீளவேயில்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் (FII) பங்குகளை விற்கத் தொடங்கியதால் சரிவு மிக அதிகமாக இருந்தது. மதியம், சந்தை சுமார் 300 புள்ளிகளுக்கு சரிவடைந்து விட்டது.
சந்தையில் பங்குகள் விலைக் குறைந்து விட்டதால், மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டினர் (Value Buying). இதையடுத்து வர்த்தகத்தின் முடிவில், சரிவு ஓரளவுக்குச் சரி செய்யப்பட்டு பங்குச் சந்தை 192 புள்ளிகளுடன் சரிவடைந்தது.
இந்தச் சரிவு செல்லும் செய்தி என்ன ?
மே மாதம் 17,2004 சரிவுடன் இந்தச் சரிவை ஒப்பிடக்கூடாது. அந்தச் சரிவு முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக நடந்தச் சரிவு (Panic Selling). ஆனால் தற்பொழுது நடந்துள்ளச் சரிவு அச்சம் தரும் சரிவு அல்ல. இது ஒரு வாய்ப்பு. சந்தை கடுமையாக விலையேறி இருந்ததால் நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் சந்தைக்கு செல்வதற்கே அச்சப்படும் சூழல் இருந்தது. எப்பொழுது சரிவு ஏற்படுமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்களைப் பயமுறுத்திக்கொண்டே இருந்தது. தற்பொழுது இந்த அச்சம் நீங்கி விட்டது என்று தான் சொல்வேன். நல்லப் பங்குகளை தெரிவு செய்து முதலீடு செய்யும் நேரமிது.
அடுத்து வரும் வாரங்களில் நிறுவனங்கள் தங்களுடைய காலாண்டு அறிக்கையைத் தாக்கல் செய்யும். நிதிநிலை அறிக்கையும் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும். இவைகளைப் பொறுத்து தான் சந்தையின் அடுத்தக் கட்ட உயர்வும் தாழ்வும் ஏற்ப்படும். தற்போதையச் சரிவு தற்காலிகமானது தான். அடுத்து வரும் நாட்களில் இந்தச் சரிவு சரி செய்யப்படும் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
சரி..எந்தப் பங்குகளை வாங்கலாம் ?
நேற்றும், இன்றும் சிமெண்ட் பங்குகள் திடமாக இருக்கின்றன. நேற்று நல்ல உயர்வைப் பெற்ற இந்தப் பங்குகள், இன்றும், இந்தக் கடும் சரிவுக்கிடையிலும் ஓரளவுக்கு உயர்வைப் பெற்றன. குஜராத் அம்புஜா, பிர்லா சிமெண்ட போன்றவை இன்று உயர்வடைந்தப் பங்குகள். ACC பங்குகள் இன்றுச் சரியவும் இல்லை. உயரவும் இல்லை. சிமெண்ட்டிற்கு இருக்கும் தேவையும், தற்பொழுதுள்ள சந்தை நிலவரத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது சிமெண்ட பங்குகளுக்கு வரும் நாட்களில் ஏற்றம் இருக்கக்கூடும்.
அதைப் போலவே பார்மா(Pharma), ஜவுளி(Textile) போன்ற துறைகளும் நீண்ட கால முதலீட்டில் லாபம் தரக்கூடியவை.
பிற துறைகளைப் பொறுத்தமட்டில் நல்லப் பங்குகளாக தெரிவு செய்தால் லாபம் நிச்சயம்.
மேலும் படிக்க
ஆனால் இன்று அனைவரின் எதிர்பார்ப்பையும் மிஞ்சி சந்தை கடுமையயகச் சரிந்து விட்டது. அவ்வப்பொழுது, சந்தையில் ஓரளவிற்குச் சரிவிருக்கும் என்று எண்ணியதற்கு மாறாக ஒரு கட்டத்தில் BSE குறியீடு சுமார் 300 புள்ளிகள் (Intraday) சரிவடைந்திருந்தது. இறுதியாக BSE குறியீடு 6458 (192 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும், NSE 2025 (78 புள்ளிகள் சரிவு) புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. இந்தச் சரிவு பாரதிய ஜனதா தோல்விக்குப் பிறகு பங்குச் சந்தையின் கறுப்பு தினம் என்று சொல்லப்படும் 2004, மே 17ல் நடந்த சரிவிற்க்குப் பிறகு நடந்துள்ள மிகப் பெரியச் சரிவு. ஆனால் கடந்த முறை நடந்தச் சரிவு போல் இல்லாமல், முதலீட்டாளர்களின் லாபவிற்பனைக் (Profit Booking) காரணமாகத் தான் சந்தை சரிந்தது.
இன்று காலை வர்த்தகம் தொடங்கியது முதலே குறியீடுகள் சரியத் தொடங்கின. உலோகப் பங்குகளான Hindalco, NALCO, TISCO போன்றவை சரியத்தொடங்கின. லண்டன் உலோகச் சந்தையில் (London Metal Exchange - LME) உலோகங்களின் விலை சரிவடைந்ததையடுத்து இந்தப் பங்குகளும் சரியத்தொடங்கின. மென்பொருள் நிறுவனங்களுக்கு வரும் காலாண்டில் லாபம் குறையக் கூடும் என்ற எதிர்ப்பர்ர்பு காரணமாக மென்பொருள் பங்குகளையும் முதலீட்டாளர்கள் விற்கத் தொடங்கினர்.
இது தவிர பங்குகளின் விலை உச்ச நிலையில் இருந்ததால் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்கத் தொடங்கினர். இந்த லாப விற்பனையால் எல்லாப் பங்குகளுமே குறிப்பிடத்தக்க அளவில் சரியத் தொடங்கின. இந்தச் சரிவு எந்தத் துறையையும் விட்டுவைக்கவில்லை. எல்லாத் துறைப் பங்குகளுமே கடும் சரிவை எதிர்கொண்டன.
இன்று குறியீட்டில் இருந்த அனைத்து பங்குகளுமே சரிவடைந்திருந்ததன. BSE குறியீட்டில் எந்தப் பங்குகளுமே உயரவில்லை. NSEல் டாபர் (Dabur) பங்கு மட்டும் 1.8% உயர்வடைந்தது. குறியீட்டுப் பங்குகள் தவிர ஏனையப் பங்குகளையும் இந்தச் சரிவு விட்டுவைக்க வில்லை. சுமார் 2019 பங்குகள் சரிவடைந்த நிலையில் 319 பங்குகள் மட்டுமே உயர்வடைந்ததைக் கொண்டு சந்தை
எந்தளவுக்குச் சரிவைடைந்துள்ளது என்பதைக் கண்டு கொள்ளலாம்.
காலையில் சரிவடைந்தச் சந்தை அச் சரிவில் இருந்து மீளவேயில்லை. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களும் (FII) பங்குகளை விற்கத் தொடங்கியதால் சரிவு மிக அதிகமாக இருந்தது. மதியம், சந்தை சுமார் 300 புள்ளிகளுக்கு சரிவடைந்து விட்டது.
சந்தையில் பங்குகள் விலைக் குறைந்து விட்டதால், மதியத்திற்கு மேல் முதலீட்டாளர்கள் பங்குகளைக் குறைந்த விலையில் வாங்க ஆர்வம் காட்டினர் (Value Buying). இதையடுத்து வர்த்தகத்தின் முடிவில், சரிவு ஓரளவுக்குச் சரி செய்யப்பட்டு பங்குச் சந்தை 192 புள்ளிகளுடன் சரிவடைந்தது.
இந்தச் சரிவு செல்லும் செய்தி என்ன ?
மே மாதம் 17,2004 சரிவுடன் இந்தச் சரிவை ஒப்பிடக்கூடாது. அந்தச் சரிவு முதலீட்டாளர்களின் அச்சம் காரணமாக நடந்தச் சரிவு (Panic Selling). ஆனால் தற்பொழுது நடந்துள்ளச் சரிவு அச்சம் தரும் சரிவு அல்ல. இது ஒரு வாய்ப்பு. சந்தை கடுமையாக விலையேறி இருந்ததால் நம்மைப் போன்ற சாதாரண முதலீட்டாளர்கள் சந்தைக்கு செல்வதற்கே அச்சப்படும் சூழல் இருந்தது. எப்பொழுது சரிவு ஏற்படுமோ என்ற அச்சமும் முதலீட்டாளர்களைப் பயமுறுத்திக்கொண்டே இருந்தது. தற்பொழுது இந்த அச்சம் நீங்கி விட்டது என்று தான் சொல்வேன். நல்லப் பங்குகளை தெரிவு செய்து முதலீடு செய்யும் நேரமிது.
அடுத்து வரும் வாரங்களில் நிறுவனங்கள் தங்களுடைய காலாண்டு அறிக்கையைத் தாக்கல் செய்யும். நிதிநிலை அறிக்கையும் அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும். இவைகளைப் பொறுத்து தான் சந்தையின் அடுத்தக் கட்ட உயர்வும் தாழ்வும் ஏற்ப்படும். தற்போதையச் சரிவு தற்காலிகமானது தான். அடுத்து வரும் நாட்களில் இந்தச் சரிவு சரி செய்யப்படும் என்றே அனைவரும் கருதுகின்றனர்.
சரி..எந்தப் பங்குகளை வாங்கலாம் ?
நேற்றும், இன்றும் சிமெண்ட் பங்குகள் திடமாக இருக்கின்றன. நேற்று நல்ல உயர்வைப் பெற்ற இந்தப் பங்குகள், இன்றும், இந்தக் கடும் சரிவுக்கிடையிலும் ஓரளவுக்கு உயர்வைப் பெற்றன. குஜராத் அம்புஜா, பிர்லா சிமெண்ட போன்றவை இன்று உயர்வடைந்தப் பங்குகள். ACC பங்குகள் இன்றுச் சரியவும் இல்லை. உயரவும் இல்லை. சிமெண்ட்டிற்கு இருக்கும் தேவையும், தற்பொழுதுள்ள சந்தை நிலவரத்தையும் கொண்டு பார்க்கும் பொழுது சிமெண்ட பங்குகளுக்கு வரும் நாட்களில் ஏற்றம் இருக்கக்கூடும்.
அதைப் போலவே பார்மா(Pharma), ஜவுளி(Textile) போன்ற துறைகளும் நீண்ட கால முதலீட்டில் லாபம் தரக்கூடியவை.
பிற துறைகளைப் பொறுத்தமட்டில் நல்லப் பங்குகளாக தெரிவு செய்தால் லாபம் நிச்சயம்.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/05/2005 07:21:00 AM No comments:
Tuesday, January 04, 2005
நல்ல நிறுவனத்தின் குணங்கள்
பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளையே வாங்க வேண்டும் என்ற கருத்தை என் முந்தையப் பலப் பதிவுகளில் முன்வைத்துள்ளேன். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?
நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?
"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,
Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை
போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.
அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "பல்ராம்பூர் சினி" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?
சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் என்று என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன். அது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை
தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான். பஜாஜ் நிறுவனத்தைப் பற்றி உதாரணமாக கூறியிருந்தேன். பஜாஜ் பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தி, அந்த
மாடல் அனைவரையும் கவர்ந்து விற்பனைப் பெருகிய பொழுது, பஜாஜ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்று கூறியிருந்தேன். ஏனெனில் அதிக அளவில் அந்த பைக்குகள் விற்பதால் பஜாஜின் உற்பத்திப் பெருகி,
லாபமும் அதிகரித்து, பங்குகளின் விலையையும் எகிறச் செய்யும். அந்தக் கதையின் இன்னெரு பக்கமும் உள்ளது.
ஹிந்துஸ்தான் லீவர் என்ற நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடையில் கிடைக்கும் சோப்பு, டூத்பேஸ்ட் என்று அனைத்துப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் தான்
தயாரிக்கப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் ரூ25,000 பங்குகளில் முதலீடு செய்வதென முடிவு செய்தார். பலவாறு யோசித்து ஹிந்துஸ்தான் லீவரே சிறந்த நிறுவனம் என முடிவு செய்து, அந்தப் பங்குகளில் முதலீடு
செய்தார். அவர் முதலீடு செய்த பொழுது பங்குகளின் விலை 250 ரூபாய். இந்த வருடம், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு விலைச் சரிந்து பங்குகளின் விலை 125ரூபாயாகி விட்டது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளில் உபயோகிக்கப்படும் பலப் பொருட்கள் இந் நிறுவனத்திற்குச் சொந்தமானவை தான். பின் ஏன் பங்குகள் சரிவடைந்தன. அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்திருந்தால்
தெரிந்திருக்கும்.
பஜாஜ் கதைக்கு வருவோம். பல்சர் அறிமுகம் செய்தாகி விட்டது. பல்சரும் பெருகி விட்டது. பஜாஜ் பங்குகள் விலையும் எகிறி விட்டது. இன்றும் கூட பல்சர் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டு தானே இருக்கிறது.
பாஜாஜின் பங்குகளை தற்பொழுது வாங்கலாமா? இங்கு தான், நம்முடைய விற்பனை ஆய்வை, ஆண்டறிக்கையுடன் பொருத்திப் பார்க்கும் ஆய்வு
தேவைப்படுகிறது. பஜாஜின் மொத்த உற்பத்தியில் பல்சரின் உற்பத்திச் சதவீதம் என்ன ? பிற மாடல்களின் உற்பத்திச் சதவீதம் என்ன ? சென்ற ஆண்டு பல்சர் எந்தளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு
எந்தளவுக்குச் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா ? பைக் சந்தையில் பஜாஜின் பங்கு எவ்வளவு (Market Share). Market Share அதிகரித்துள்ளதா ? குறைந்துள்ளதா ? போட்டி நிறுவனங்களுடன்
ஒப்பிடும் பொழுது பஜாஜின் விற்பனை எப்படியுள்ளது ? இப்படியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வின் முடிவு நமக்கு எதைச் சொல்லும் ?
பஜாஜ் நிறுவனத்தின் உற்பத்தி, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்றால் பஜாஜ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தானே பொருள். ஒரு நிறுவனம் வளரும் பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளும் உயரும். வளர்ச்சி குறையும் பொழுது அதற்கேற்றாற்ப் போல் பங்குகள் விலையும் சரியும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது பங்குகளின் விலையும் அதை பிரதிபலிக்கும். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் சரிந்தது இந்த விதிகளின் படி தான்.
போட்டி நிறுவனங்கள் பெருகி விட்டதால் அந்த நிறுவனத்தின் பொருட்கள், கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் சந்தையில் குறைவாகவே விற்பனையாகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் அந் நிறுவனத்தின் விற்பனை மிக மோசமாகவே இருந்தது. அதன் எதிரொலி சந்தையிலும் இருக்கத் தானே செய்யும். நல்ல வளர்ச்சியடைந்த பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட, வளரும் நிறுவனங்களில்
முதலீடு செய்வதே சிறந்தது. இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனமான பார்தி நிறுவனப் பங்குகள் தான் அதிக லாபமடைந்தன. ஏன் இந்த வளர்ச்சி ? "நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே ஏர்டெல் கிடைத்தப் பொழுதே" உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ஏர்டெல் வளருகிறது. இந்த எண்ணம் தோன்றியவுடன் அந்தப் பங்குகளையும் வாங்கியிருந்தால், ஏர்டெல்லுடன் நாமும் வளர்ந்திருப்போம்.
கடந்த ஒரு வருடத்தில் பார்திப் பங்குகள் சுமார் 100% வளர்ச்சிப் பெற்றிருந்தன. நீங்கள் 2003 டிசம்பரில் ரூ10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 20,000 ரூபாய். அது போலவே வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனம் எந்தளவுக்கு வளரும் என்பது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடும் பொழுதே, நமக்குப் புரியும். மக்கள் தொகையில் ஏர்டெல்லுக்கு மிக அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் தான் வளர்ச்சியில் தேக்கமடைந்த பெரிய நிறுவனப் பங்குகள் அதிக லாபம் தருவதில்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தான் லாபம் அதிகம் தரும். 2004ம் ஆண்டு கூட நடுத்தர நிறுவனப் பங்குகளான
மிட்கேப் (Midcap) பங்குகள் தான் அதிக லாபம் தந்தன.
அடுத்து வரும் பதிவுகளிலும் நிறுவனங்களை எப்படி ஆய்வு செய்வது என்பதைத் தொடர்ந்துப் பார்ப்போம்.
மேலும் படிக்க
நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?
"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,
Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை
போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.
அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "பல்ராம்பூர் சினி" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?
சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் என்று என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன். அது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை
தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான். பஜாஜ் நிறுவனத்தைப் பற்றி உதாரணமாக கூறியிருந்தேன். பஜாஜ் பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தி, அந்த
மாடல் அனைவரையும் கவர்ந்து விற்பனைப் பெருகிய பொழுது, பஜாஜ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்று கூறியிருந்தேன். ஏனெனில் அதிக அளவில் அந்த பைக்குகள் விற்பதால் பஜாஜின் உற்பத்திப் பெருகி,
லாபமும் அதிகரித்து, பங்குகளின் விலையையும் எகிறச் செய்யும். அந்தக் கதையின் இன்னெரு பக்கமும் உள்ளது.
ஹிந்துஸ்தான் லீவர் என்ற நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடையில் கிடைக்கும் சோப்பு, டூத்பேஸ்ட் என்று அனைத்துப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் தான்
தயாரிக்கப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் ரூ25,000 பங்குகளில் முதலீடு செய்வதென முடிவு செய்தார். பலவாறு யோசித்து ஹிந்துஸ்தான் லீவரே சிறந்த நிறுவனம் என முடிவு செய்து, அந்தப் பங்குகளில் முதலீடு
செய்தார். அவர் முதலீடு செய்த பொழுது பங்குகளின் விலை 250 ரூபாய். இந்த வருடம், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு விலைச் சரிந்து பங்குகளின் விலை 125ரூபாயாகி விட்டது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளில் உபயோகிக்கப்படும் பலப் பொருட்கள் இந் நிறுவனத்திற்குச் சொந்தமானவை தான். பின் ஏன் பங்குகள் சரிவடைந்தன. அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்திருந்தால்
தெரிந்திருக்கும்.
பஜாஜ் கதைக்கு வருவோம். பல்சர் அறிமுகம் செய்தாகி விட்டது. பல்சரும் பெருகி விட்டது. பஜாஜ் பங்குகள் விலையும் எகிறி விட்டது. இன்றும் கூட பல்சர் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டு தானே இருக்கிறது.
பாஜாஜின் பங்குகளை தற்பொழுது வாங்கலாமா? இங்கு தான், நம்முடைய விற்பனை ஆய்வை, ஆண்டறிக்கையுடன் பொருத்திப் பார்க்கும் ஆய்வு
தேவைப்படுகிறது. பஜாஜின் மொத்த உற்பத்தியில் பல்சரின் உற்பத்திச் சதவீதம் என்ன ? பிற மாடல்களின் உற்பத்திச் சதவீதம் என்ன ? சென்ற ஆண்டு பல்சர் எந்தளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு
எந்தளவுக்குச் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா ? பைக் சந்தையில் பஜாஜின் பங்கு எவ்வளவு (Market Share). Market Share அதிகரித்துள்ளதா ? குறைந்துள்ளதா ? போட்டி நிறுவனங்களுடன்
ஒப்பிடும் பொழுது பஜாஜின் விற்பனை எப்படியுள்ளது ? இப்படியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வின் முடிவு நமக்கு எதைச் சொல்லும் ?
பஜாஜ் நிறுவனத்தின் உற்பத்தி, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்றால் பஜாஜ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தானே பொருள். ஒரு நிறுவனம் வளரும் பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளும் உயரும். வளர்ச்சி குறையும் பொழுது அதற்கேற்றாற்ப் போல் பங்குகள் விலையும் சரியும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது பங்குகளின் விலையும் அதை பிரதிபலிக்கும். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் சரிந்தது இந்த விதிகளின் படி தான்.
போட்டி நிறுவனங்கள் பெருகி விட்டதால் அந்த நிறுவனத்தின் பொருட்கள், கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் சந்தையில் குறைவாகவே விற்பனையாகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் அந் நிறுவனத்தின் விற்பனை மிக மோசமாகவே இருந்தது. அதன் எதிரொலி சந்தையிலும் இருக்கத் தானே செய்யும். நல்ல வளர்ச்சியடைந்த பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட, வளரும் நிறுவனங்களில்
முதலீடு செய்வதே சிறந்தது. இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனமான பார்தி நிறுவனப் பங்குகள் தான் அதிக லாபமடைந்தன. ஏன் இந்த வளர்ச்சி ? "நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே ஏர்டெல் கிடைத்தப் பொழுதே" உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ஏர்டெல் வளருகிறது. இந்த எண்ணம் தோன்றியவுடன் அந்தப் பங்குகளையும் வாங்கியிருந்தால், ஏர்டெல்லுடன் நாமும் வளர்ந்திருப்போம்.
கடந்த ஒரு வருடத்தில் பார்திப் பங்குகள் சுமார் 100% வளர்ச்சிப் பெற்றிருந்தன. நீங்கள் 2003 டிசம்பரில் ரூ10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 20,000 ரூபாய். அது போலவே வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனம் எந்தளவுக்கு வளரும் என்பது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடும் பொழுதே, நமக்குப் புரியும். மக்கள் தொகையில் ஏர்டெல்லுக்கு மிக அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் தான் வளர்ச்சியில் தேக்கமடைந்த பெரிய நிறுவனப் பங்குகள் அதிக லாபம் தருவதில்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தான் லாபம் அதிகம் தரும். 2004ம் ஆண்டு கூட நடுத்தர நிறுவனப் பங்குகளான
மிட்கேப் (Midcap) பங்குகள் தான் அதிக லாபம் தந்தன.
அடுத்து வரும் பதிவுகளிலும் நிறுவனங்களை எப்படி ஆய்வு செய்வது என்பதைத் தொடர்ந்துப் பார்ப்போம்.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/04/2005 04:13:00 PM 2 comments:
Subscribe to:
Posts (Atom)