பங்குகளை வாங்க வேண்டும். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளையே வாங்க வேண்டும் என்ற கருத்தை என் முந்தையப் பலப் பதிவுகளில் முன்வைத்துள்ளேன். ஆனால் நல்ல நிறுவனப் பங்குகளை எப்படி அடையாளம் கண்டு கொள்வது ?
நீங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை வாங்குவதற்கு முன்பு, அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்த்திருக்கிறீர்களா ? பங்குகளில் முதலீடு செய்யும் எத்தனைப் பேர் ஆண்டறிக்கையைப் பார்த்து, ஆய்வு செய்து பங்குகளை வாங்கியிருக்கிறீர்கள் ? நமக்குக் கிடைக்கும் ஏதோ ஒரு டிப்ஸ், ஏதோ ஒரு தினசரியில் "Buy" என்று முத்திரைக் குத்தப்பட்டப் பங்குகள். இவைகளைக் கண்டு தானே சிறிதளவுக் கூட யோசிக்காமல், பங்குகளை வாங்குகிறோம். ஏன் இத்தகைய மனநிலை ?
"நம்மால் ஆய்வு செய்ய முடியாது. இது ஒரு சிக்கலான கணக்கு வழக்கு" என்ற எண்ணமே நம்மை ஆட்டிப் படைக்கிறது. வணிக நாளிதழ்களும், தொலைக்காட்சிகளும் Technical Analysis, Resistance Level, Support Level,
Relative Strength Index என்று பலப் புரியாத வார்த்தைகளைச் சொல்லி நம்மை மிரட்டி வைத்துள்ளன. அனலிஸ்டுகள் நன்றாக ஆய்வு செய்து தான் சொல்வார்கள் என்ற எண்ணத்தில், கடவுளின் மேல் பாரத்தை
போட்டு விட்டு நாமும் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்வோம்.
அதுவும் நமக்கு இது வரை தெரியாதப் பங்குகளை சொன்னால் தான் நாம் வாங்குவோம். "பல்ராம்பூர் சினி" நல்ல லாபமடையும் என்று அனலிஸ்டுகள் ஆருடம் சொல்வார்கள். அது என்ன நிறுவனம். என்ன உற்பத்திச் செய்கிறது.
அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல், டிப்சை அப்படியே பின்பற்றி வாங்குவோம். அந்த நிறுவனம் நல்ல நிறுவனமாகவே இருக்கலாம். ஆனால் ஆய்வு செய்யாமல் நாம் பாடுபட்டு சேர்த்தப் பணத்தை முதலீடு செய்யலாமா ?
சிக்கலான கணக்குகளைப் போடாமல் எளிதாக ஆராய முடியும். நாம் அன்றாடம் பார்க்கும் ஒவ்வொரு நிகழ்வும் ஆய்வு தான் என்று என்னுடைய முந்தைய ஒரு பதிவில் கூறியிருந்தேன். அது ஆராய்ச்சியின் ஆரம்ப நிலை
தான். நம்முடைய ஆராய்ச்சியின் அடுத்த நிலை அந்த நிறுவனத்தின் ஆண்டறிக்கையைப் பார்ப்பது தான். பஜாஜ் நிறுவனத்தைப் பற்றி உதாரணமாக கூறியிருந்தேன். பஜாஜ் பல்சர் பைக்கை அறிமுகப்படுத்தி, அந்த
மாடல் அனைவரையும் கவர்ந்து விற்பனைப் பெருகிய பொழுது, பஜாஜ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் என்று கூறியிருந்தேன். ஏனெனில் அதிக அளவில் அந்த பைக்குகள் விற்பதால் பஜாஜின் உற்பத்திப் பெருகி,
லாபமும் அதிகரித்து, பங்குகளின் விலையையும் எகிறச் செய்யும். அந்தக் கதையின் இன்னெரு பக்கமும் உள்ளது.
ஹிந்துஸ்தான் லீவர் என்ற நிறுவனத்தைப் பற்றி கேள்விப்படாதவர்கள் யாரும் இருக்க முடியாது. மளிகைக் கடையில் கிடைக்கும் சோப்பு, டூத்பேஸ்ட் என்று அனைத்துப் பொருட்களும் இந்த நிறுவனத்தால் தான்
தயாரிக்கப்படுகின்றன. என் நண்பர் ஒருவர் ரூ25,000 பங்குகளில் முதலீடு செய்வதென முடிவு செய்தார். பலவாறு யோசித்து ஹிந்துஸ்தான் லீவரே சிறந்த நிறுவனம் என முடிவு செய்து, அந்தப் பங்குகளில் முதலீடு
செய்தார். அவர் முதலீடு செய்த பொழுது பங்குகளின் விலை 250 ரூபாய். இந்த வருடம், கடந்த ஏழு வருடங்களில் இல்லாத அளவுக்கு விலைச் சரிந்து பங்குகளின் விலை 125ரூபாயாகி விட்டது. இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான வீடுகளில் உபயோகிக்கப்படும் பலப் பொருட்கள் இந் நிறுவனத்திற்குச் சொந்தமானவை தான். பின் ஏன் பங்குகள் சரிவடைந்தன. அந்த நிறுவனத்தின் ஆண்டு அறிக்கையைப் பார்த்திருந்தால்
தெரிந்திருக்கும்.
பஜாஜ் கதைக்கு வருவோம். பல்சர் அறிமுகம் செய்தாகி விட்டது. பல்சரும் பெருகி விட்டது. பஜாஜ் பங்குகள் விலையும் எகிறி விட்டது. இன்றும் கூட பல்சர் அதிக அளவில் விற்பனையாகிக் கொண்டு தானே இருக்கிறது.
பாஜாஜின் பங்குகளை தற்பொழுது வாங்கலாமா? இங்கு தான், நம்முடைய விற்பனை ஆய்வை, ஆண்டறிக்கையுடன் பொருத்திப் பார்க்கும் ஆய்வு
தேவைப்படுகிறது. பஜாஜின் மொத்த உற்பத்தியில் பல்சரின் உற்பத்திச் சதவீதம் என்ன ? பிற மாடல்களின் உற்பத்திச் சதவீதம் என்ன ? சென்ற ஆண்டு பல்சர் எந்தளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு
எந்தளவுக்குச் செய்யப்படுகிறது. உற்பத்தி குறைந்துள்ளதா, அதிகரித்துள்ளதா ? பைக் சந்தையில் பஜாஜின் பங்கு எவ்வளவு (Market Share). Market Share அதிகரித்துள்ளதா ? குறைந்துள்ளதா ? போட்டி நிறுவனங்களுடன்
ஒப்பிடும் பொழுது பஜாஜின் விற்பனை எப்படியுள்ளது ? இப்படியாக ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
இந்த ஆய்வின் முடிவு நமக்கு எதைச் சொல்லும் ?
பஜாஜ் நிறுவனத்தின் உற்பத்தி, சென்ற ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு உயர்ந்திருக்கிறது என்றால் பஜாஜ் நிறுவனம் வளர்ந்து கொண்டிருக்கிறது என்று தானே பொருள். ஒரு நிறுவனம் வளரும் பொழுது அந்த நிறுவனத்தின் பங்குகளும் உயரும். வளர்ச்சி குறையும் பொழுது அதற்கேற்றாற்ப் போல் பங்குகள் விலையும் சரியும். வளர்ச்சி தேக்கமடையும் பொழுது பங்குகளின் விலையும் அதை பிரதிபலிக்கும். கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் ஹிந்துஸ்தான் லீவர் பங்குகள் சரிந்தது இந்த விதிகளின் படி தான்.
போட்டி நிறுவனங்கள் பெருகி விட்டதால் அந்த நிறுவனத்தின் பொருட்கள், கடந்த சில ஆண்டுகளைக் காட்டிலும் சந்தையில் குறைவாகவே விற்பனையாகிறது. கடந்த வருடங்களை விட இந்த வருடம் அந் நிறுவனத்தின் விற்பனை மிக மோசமாகவே இருந்தது. அதன் எதிரொலி சந்தையிலும் இருக்கத் தானே செய்யும். நல்ல வளர்ச்சியடைந்த பெரிய நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்வதை விட, வளரும் நிறுவனங்களில்
முதலீடு செய்வதே சிறந்தது. இந்த ஆண்டு ஏர்டெல் நிறுவனமான பார்தி நிறுவனப் பங்குகள் தான் அதிக லாபமடைந்தன. ஏன் இந்த வளர்ச்சி ? "நீங்கள் எங்கிருந்தாலும், அங்கே ஏர்டெல் கிடைத்தப் பொழுதே" உங்களுக்கு புரிந்திருக்க வேண்டும். ஏர்டெல் வளருகிறது. இந்த எண்ணம் தோன்றியவுடன் அந்தப் பங்குகளையும் வாங்கியிருந்தால், ஏர்டெல்லுடன் நாமும் வளர்ந்திருப்போம்.
கடந்த ஒரு வருடத்தில் பார்திப் பங்குகள் சுமார் 100% வளர்ச்சிப் பெற்றிருந்தன. நீங்கள் 2003 டிசம்பரில் ரூ10,000 முதலீடு செய்திருந்தால், இன்று அதன் மதிப்பு 20,000 ரூபாய். அது போலவே வரும் ஆண்டுகளில் இந்த நிறுவனம் எந்தளவுக்கு வளரும் என்பது இந்தியாவில் உள்ள மக்கள் தொகையைக் கணக்கிடும் பொழுதே, நமக்குப் புரியும். மக்கள் தொகையில் ஏர்டெல்லுக்கு மிக அதிக வர்த்தக வாய்ப்புகள் இருக்கிறது.
அதனால் தான் வளர்ச்சியில் தேக்கமடைந்த பெரிய நிறுவனப் பங்குகள் அதிக லாபம் தருவதில்லை. நடுத்தர மற்றும் சிறிய நிறுவனங்கள் தான் லாபம் அதிகம் தரும். 2004ம் ஆண்டு கூட நடுத்தர நிறுவனப் பங்குகளான
மிட்கேப் (Midcap) பங்குகள் தான் அதிக லாபம் தந்தன.
அடுத்து வரும் பதிவுகளிலும் நிறுவனங்களை எப்படி ஆய்வு செய்வது என்பதைத் தொடர்ந்துப் பார்ப்போம்.
மேலும் படிக்க
Tuesday, January 04, 2005
நல்ல நிறுவனத்தின் குணங்கள்
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/04/2005 04:13:00 PM 2 comments:
இன்றையச் சந்தை நிலவரம்
தொடர்ந்து முன்னேறிக் கொண்டிருந்தச் சந்தை, இன்று சற்று சரிவடைந்துள்ளது. முதலீட்டாளர்கள், லாபம் எடுப்பதற்காகப் பங்குகளை விற்றதால் தான் குறியீடு சரிவடைந்தது. BSE குறியீடு 28 புள்ளிகள் சரிவடைந்து 6651 புள்ளிகளுடனும், NSE 11 புள்ளிகள் சரிவடைந்து 2104 புள்ளிகளுடனும் இன்றைய வர்த்தகம் முடிவடைந்தது. கடந்த வாரமும், நேற்றும், பங்குக் குறியீடு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்தது. எல்லாப் பங்குகளுமே விலை ஏறி இருந்தன. இன்று, இந்த உயர்வைப் பயன்படுத்தி முதலீட்டாளர்கள் பங்குகளை விற்று லாபம் பார்க்கத் தொடங்கினர்.
இன்று Reliance, Reliance Energy, IPCL, Reliance Capital போன்ற ரிலயன்ஸ் குழுமப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்தன. அது போலவே மென்பொருள் பங்குகளும் இன்று சரிவடைந்தன. நேற்று இந்தப் பங்குகள் லாபத்துடன் இருந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது, இன்று ஏன் இவைச் சரிந்தன என்பது நமக்குப் புரியும். லாப விற்பனை தான் (Profit Booking).
வங்கிப் பங்குகளும், சிமெண்ட் பங்குகளும் நல்ல லாபமடைந்தன. இந்த ஆண்டு சிமெண்டிற்கு அதிக தேவையிருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து சிமெண்ட் நிறுவனங்கள் சிமெண்ட்டின் விலையை உயர்த்தி உள்ளன. இதனால் இந் நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்தப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். சிமெண்ட் பங்குகளான குஜராத் அம்புஜா, ACC போன்றவை இன்று நல்ல உயர்வைப் பெற்றன.
கடந்த சில நாட்களாக அதிக உயர்வைப் பெற்றச் சந்தை, ஓரளவுக்குச் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகக் குறைந்தப் புள்ளிகளே குறியீடு சரிவடைந்தது. முதலீட்டாளர்கள் லாப விற்பனையில் அதிக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க முனையவில்லை.
அது போலவே பங்குகளை வாங்குவதிலும் பெரிய ஆர்வம் யாருக்குமில்லை. சந்தை சரியக்கூடும் என்ற எண்ணத்திலேயே அனைவரும் இருந்ததால், யாரும் பங்குகளை அதிகமாக வாங்க வில்லை. இத்தகைய வர்த்தகத்தால் தான் சந்தை கொஞ்சம் தள்ளாட்டத்துடன் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து பின் 28 புள்ளிகள் சரிவடைந்தது.
மேலும் படிக்க
இன்று Reliance, Reliance Energy, IPCL, Reliance Capital போன்ற ரிலயன்ஸ் குழுமப் பங்குகள் குறிப்பிடத்தக்க அளவில் சரிவடைந்தன. அது போலவே மென்பொருள் பங்குகளும் இன்று சரிவடைந்தன. நேற்று இந்தப் பங்குகள் லாபத்துடன் இருந்ததை வைத்துப் பார்க்கும் பொழுது, இன்று ஏன் இவைச் சரிந்தன என்பது நமக்குப் புரியும். லாப விற்பனை தான் (Profit Booking).
வங்கிப் பங்குகளும், சிமெண்ட் பங்குகளும் நல்ல லாபமடைந்தன. இந்த ஆண்டு சிமெண்டிற்கு அதிக தேவையிருக்கும் என்று கருதப்படுகிறது. இதையடுத்து சிமெண்ட் நிறுவனங்கள் சிமெண்ட்டின் விலையை உயர்த்தி உள்ளன. இதனால் இந் நிறுவனங்களுக்கு லாபம் அதிகரிக்கும். இந்தப் பங்குகளை வாங்குவதற்கு முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். சிமெண்ட் பங்குகளான குஜராத் அம்புஜா, ACC போன்றவை இன்று நல்ல உயர்வைப் பெற்றன.
கடந்த சில நாட்களாக அதிக உயர்வைப் பெற்றச் சந்தை, ஓரளவுக்குச் சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மிகக் குறைந்தப் புள்ளிகளே குறியீடு சரிவடைந்தது. முதலீட்டாளர்கள் லாப விற்பனையில் அதிக ஆர்வம் காட்டவில்லை. குறிப்பாக வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குகளை விற்க முனையவில்லை.
அது போலவே பங்குகளை வாங்குவதிலும் பெரிய ஆர்வம் யாருக்குமில்லை. சந்தை சரியக்கூடும் என்ற எண்ணத்திலேயே அனைவரும் இருந்ததால், யாரும் பங்குகளை அதிகமாக வாங்க வில்லை. இத்தகைய வர்த்தகத்தால் தான் சந்தை கொஞ்சம் தள்ளாட்டத்துடன் ஏறுவதும், இறங்குவதுமாக இருந்து பின் 28 புள்ளிகள் சரிவடைந்தது.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/04/2005 01:22:00 PM No comments:
Monday, January 03, 2005
திருக்குறளும், இன்றைய பொருளாதாரமும்
திருக்குறளுக்கு யார் வேண்டுமானாலும் உரை எழுதலாம் என்ற விதியை நானும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றிருக்கிறேன். எக் காலத்திற்கும் ஏற்ற இந் நூல், இக்கால பொருளாதாரச் சூழ்நிலைக்குப் பொருந்துகிறதா என்று சோதனை செய்ய ஒரு சிறிய முயற்ச்சி. பிழை இருந்தால் மன்னியுங்கள்.
அதிகாரம் : நாடு
விளைச்சல் என்பதை இங்கு உள்நாட்டு உற்பத்தி என்று எடுத்துக் கொள்ளலாம். இன்று எல்லா நாடுகளிலும் பற்றாக்குறையும் தட்டுப்பாடுமே நிலவுகிறது. குறைவில்லாத உற்பத்தி இன்று எந்த நாட்டிலும் இல்லை. மிகுதியான பொருளை ஏற்றுமதி செய்வதும், உள்நாட்டில் இல்லாதப் பொருளை இறக்குமதி செய்வதும் தான் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை. எல்லா நாட்டு நிதி நிலையிலுமே பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தான் எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வாறு பற்றாக்குறையைக் குறைக்க கல்வி அவசியமாகிறது. மனிதவள மேம்பாடு இருந்தால் தான் தொழில் பெருக முடியும். தொழில் பெருகினால் தான் நாட்டின் செல்வம் பெருகும். வள்ளுவரின் அந்த Dream நாட்டை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
பொருளாதார வளமுடைய நாடே இன்று எல்லோராலும் விரும்பப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என்று படையடுப்பதன் நோக்கம் என்ன ? அந்த நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றமும், மிகுதியான வேலை வாய்ப்பும் தானே.
இந்தியாவில் தற்பொழுது கூட வரி ஏய்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள் சதவீதம் மிகக் குறைவு. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலமாகத் தான் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். எல்லோரும் வரிச் செலுத்தினால் தான் நல்ல நாடு என்ற நிலையை நோக்கி நாம் நகர முடியும். வரியை ஒரு சுமையாக எண்ணி ஏய்க்க நினைத்தால் நாடு எப்படி மேன்மை அடைய முடியும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை உயர்த்துவது தான் இன்றைய வளரும் நாடுகளுக்குள்ள முக்கியமான சவால். அது போலவே நல்ல சுகாதாரமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கவே இன்று எல்லா வளரும் நாடுகளும் முயன்று கொண்டிருக்கிறது. இவ்வாறு முயன்று கொண்டிருக்கிற நாடுகளை வளரும் நாடுகள் எனவும், முயன்று வெற்றிப் பெற்று விட்ட நாடுகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் என்றும் சொல்கிறோம். வறுமை இருந்தாலும், பகையை வெற்றிக் கொள்ள இன்று எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பகை இருந்தாலும், அந்தப் பகையை சமாதானமாக மாற்றுவதற்கும் முயற்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சவால்களை எல்லாம் சமாளித்தால் தான் மக்கள் சுமுகமாக இருக்க முடியும். நல்ல நாடு என்ற நிலைக்குச் செல்ல முடியும்
இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் என்று மாறிக் கொண்டே இருந்த பிரதமர்களாலும், நிலையற்ற தன்மையினாலும் நாடு அடைந்த பின்னடைவுகளை எண்ணும் பொழுது வள்ளுவரின் வாக்கு இக்காலத்திலும் பொருந்தத்தானே செய்கிறது.
மேலும் படிக்க
அதிகாரம் : நாடு
- தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச்
செல்வரும் சேர்வது நாடு.
விளைச்சல் என்பதை இங்கு உள்நாட்டு உற்பத்தி என்று எடுத்துக் கொள்ளலாம். இன்று எல்லா நாடுகளிலும் பற்றாக்குறையும் தட்டுப்பாடுமே நிலவுகிறது. குறைவில்லாத உற்பத்தி இன்று எந்த நாட்டிலும் இல்லை. மிகுதியான பொருளை ஏற்றுமதி செய்வதும், உள்நாட்டில் இல்லாதப் பொருளை இறக்குமதி செய்வதும் தான் இன்றைய பொருளாதாரச் சூழ்நிலை. எல்லா நாட்டு நிதி நிலையிலுமே பற்றாக்குறை இருந்து கொண்டு தான் இருக்கிறது. அந்தப் பற்றாக்குறையைக் குறைப்பதற்கு தான் எல்லா நாடுகளும் நடவடிக்கை எடுத்து வருகின்றன. அவ்வாறு பற்றாக்குறையைக் குறைக்க கல்வி அவசியமாகிறது. மனிதவள மேம்பாடு இருந்தால் தான் தொழில் பெருக முடியும். தொழில் பெருகினால் தான் நாட்டின் செல்வம் பெருகும். வள்ளுவரின் அந்த Dream நாட்டை நோக்கித் தான் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.
- பெரும்பொருளால் பெட்டக்க தாகி அருங்கேட்டான்
ஆற்ற விளைவது நாடு
பொருளாதார வளமுடைய நாடே இன்று எல்லோராலும் விரும்பப்படுகிறது. இந்தியர்கள் அனைவரும் அமெரிக்கா, ஐரோப்பா, வளைகுடா என்று படையடுப்பதன் நோக்கம் என்ன ? அந்த நாடுகளில் உள்ள பொருளாதார ஏற்றமும், மிகுதியான வேலை வாய்ப்பும் தானே.
- பொறையருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையருங்கு நேர்வது நாடு
இந்தியாவில் தற்பொழுது கூட வரி ஏய்ப்பவர்கள் தான் அதிகம் உள்ளனர். பிற நாடுகளுடன் ஒப்பிடும் பொழுது இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்கள் சதவீதம் மிகக் குறைவு. வரி செலுத்துபவர்களின் எண்ணிக்கையைப் பெருக்குவதன் மூலமாகத் தான் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். எல்லோரும் வரிச் செலுத்தினால் தான் நல்ல நாடு என்ற நிலையை நோக்கி நாம் நகர முடியும். வரியை ஒரு சுமையாக எண்ணி ஏய்க்க நினைத்தால் நாடு எப்படி மேன்மை அடைய முடியும்.
- உறுபசியும் ஒவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு
வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களை உயர்த்துவது தான் இன்றைய வளரும் நாடுகளுக்குள்ள முக்கியமான சவால். அது போலவே நல்ல சுகாதாரமான சூழ்நிலையை அமைத்துக் கொடுக்கவே இன்று எல்லா வளரும் நாடுகளும் முயன்று கொண்டிருக்கிறது. இவ்வாறு முயன்று கொண்டிருக்கிற நாடுகளை வளரும் நாடுகள் எனவும், முயன்று வெற்றிப் பெற்று விட்ட நாடுகளை வளர்ச்சிப் பெற்ற நாடுகள் என்றும் சொல்கிறோம். வறுமை இருந்தாலும், பகையை வெற்றிக் கொள்ள இன்று எல்லா நாடுகளுமே தங்கள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டுக் கொண்டிருக்கின்றனர். பகை இருந்தாலும், அந்தப் பகையை சமாதானமாக மாற்றுவதற்கும் முயற்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. இந்தச் சவால்களை எல்லாம் சமாளித்தால் தான் மக்கள் சுமுகமாக இருக்க முடியும். நல்ல நாடு என்ற நிலைக்குச் செல்ல முடியும்
- பல்குழுவும் பாழ்செய்யும் உட்பகையும் வேந்தலைக்கும்
கொல்குறும்பும் இல்லது நாடு
- இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்
வல்லரணும் நாட்டிற்கு உறுப்பு.
- பிணியின்மை செல்வம் விளைவின்பம் ஏமம்
அணியென்ப நாட்டிற் கிவ் வைந்து
- ஆங்கமை வெய்தியக் கண்ணும் பயமின்றே
வேந்தமை வில்லாத நாடு.
இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்தாலும், வாஜ்பாய், தேவகவுடா, குஜ்ரால் என்று மாறிக் கொண்டே இருந்த பிரதமர்களாலும், நிலையற்ற தன்மையினாலும் நாடு அடைந்த பின்னடைவுகளை எண்ணும் பொழுது வள்ளுவரின் வாக்கு இக்காலத்திலும் பொருந்தத்தானே செய்கிறது.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/03/2005 02:48:00 PM 1 comment:
சோழர்களின் பொருளாதாரப் போர்கள்
ஆசியக் கண்டத்திலுள்ள இந்தியா, சீனா, இந்தோனேசியா, மலோசியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் தான் தற்பொழுது உலகில் வேகமாக வளர்ச்சிப் பெற்று வரும் பொருளாதார நாடுகள். வரும் ஆண்டுகளில் ஆசிய நாடுகளின் பொருளாதாரம் பெரும் வளர்ச்சி அடையும் என்று பொருளாதார வல்லுனர்கள் கருதுகிறார்கள்.
சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன.
அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்லாமல் பொருளாதார காரணங்களுக்காகவுமே சேர, பாண்டிய, இலங்கை, சுமத்ரா, பர்மா, கடாரம் (தற்போதைய மலேசியா), மாலத் தீவுகள் போன்ற நாடுகளின் மீது படை எடுத்தனர். தன் நாட்டு வணிகர்களுக்கும்,
பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே பலப் போர்களை சோழ மன்னர்கள் தொடுத்தார்கள். ஸ்ரீவிஜய நாட்டின் மீது போர் தொடுத்த ராஜேந்திரச் சோழன் தன் வணிகர்களுக்கு இடையுறு செய்த மன்னர்களுக்குப் பாடம் புகட்டியப் பிறகு, அவர்களிடமே ஆட்சியை ஓப்படைத்து விட்டான். தன் வணிகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.
இந்த வர்த்தகச் சூழநிலையைக் கொஞ்சம் அலசுவோம்
சுமத்ரா தீவுகள், கடாரம், பர்மா போன்ற பகுதிகள் ஸ்ரீவிஜய நாடு என்று அழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில், அந் நாட்டை ஆண்ட மன்னன் பெயர் சூடாமணிவர்மன். ஸ்ரீவிஜய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைய நல்லுறவும் வர்த்தக தொடர்பும் இருந்தது. சோழ சம்ராஜ்யத்திற்கு வர்த்தகம் செய்ய ஏராளமான வர்த்த்கர்கள் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து வருவார்கள். கடாரத்து இரும்பு, தேக்கு மரங்கள் போன்றவை ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அது போலவே சோழ நாட்டில் விவசாயம் செழித்தோங்கியதால் மிகுதியான தானியங்கள், ஏலம், மிளகு, நெசவுப் பொருட்கள் போன்றவை தெற்காசிய மற்றும் சீனா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமத்ரா மட்டுமல்லாமல் சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் சோழ நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் தான் முக்கிய இடம் வகித்தது. சோழ நாட்டில் பல வர்த்தக குழக்களையும் ஏற்படுத்தினார்கள் . பல பொருட்களில் வர்த்தகம் நடைப்பெற்றது
ஸ்ரீவிஜய நாட்டுடன் நல்லுறவாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம், ராஜேந்திரச் சோழன் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூடாமணிவர்மன் காலத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழர்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக சோழ நாட்டிற்கும், சீனாவிற்கும் இடைய இருந்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்ச்சியிலோ, அல்லது சீனாவுடன் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தி சோழ நாட்டு வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் செயலிலோ, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. தன் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரச் சோழன் தனது கடற்ப்படையைக் கொண்டு ஸ்ரீவிஜயா நாட்டின் மீது 1025ம் ஆண்டு போர் தொடுத்தான் (உலக வர்த்தகத்தில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் இணையத் தளத்தில் இந்த நிகழ்வும் இடம் பெற்றுள்ளது)
போரில் வெற்றிப் பெற்ற ராஜேந்திரச் சோழன், அந் நாட்டை தானே ஆட்சி செய்யாமல், அம் மன்னர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஸ்ரீவிஜய நாட்டை, கப்பம் கட்டும் ஒரு குறிநில நாடாக, சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான்.அது போலவே சோழ மன்னர்களின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் தங்களது வர்த்தகம் அரபு நாட்டை சேர்ந்தவர்களால் பாதிப்படையக் கூடும் என்று கருதிய சோழர்கள் அவர்களின் வர்த்தகத்தை தடுக்க முனைந்தார்கள். அரபு நாடுகள் மீது அவர்களால் படையெடுக்க இயலாத சூழ்நிலையில், அவர்களின் வர்த்தக மையங்களாக விளங்கிய மாலத்தீவுகள், மலபார் பகுதிகள் (சேர நாடு) மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து, அந் நாடுகளைத் தங்களின் ஆளுமைக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தங்கள் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அரபு நாட்டுடனும் சோழர்கள் வர்த்தகம் செய்துள்ளார்கள். தங்கள் வர்த்தகம் செழிக்க வேண்டும், ஆனால் தங்களுடன் போட்டியிடுபவர்களின் வர்த்தக தளங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே பலப் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறு தான் இலங்கையின் தலைநகராக விளங்கிய அணுராதாபுரத்தை நிர்மூலமாக்கி, தங்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்கள்.
சோழ நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது உள்ளது போலவே வரி விதிப்பு மூலமே நிர்வாகிக்கப்பட்டது. நில வரி மட்டுமல்லாமல், வர்த்தக வரியும் விதிக்கப்ப்ட்டது. வர்த்தகம் செழித்தோங்கினால் தான் தங்களுக்கு வரி கிடைக்கும், என்ற எண்ணமே, தங்கள் வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம் அவர்களை போர் செய்யத் தூண்டியது.
பொருளாதாரம் மட்டுமில்லாமல் சோழ நாட்டைப் போன்ற மாபொரும் சாம்ராஜயத்தை நிர்வகிக்க கல்வி மிக முக்கியம் எனக் கருதிய சோழர்கள், கோயில்களில் கல்விச் சாலைகளை தோற்றுவித்தார்கள் (Human Resouce Development). சமய நூல்கள் மட்டுமல்லாது கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் இந்தக் கல்விச் சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. அக் காலத்தில் சோழ நாட்டில் படிப்பறிவு அதிகமிருந்ததாக தெரிகிறது.
மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கிரமங்களில் நிர்வாகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். கிராம நிர்வாகங்களை கவனித்தல், வரி விதித்தல், சட்டம் ஒழுங்கு, உணவு சேமிப்பு போன்றவை இந்தக் கிராமக் குழுக்களிடமே இருந்தது (Decentralization). இந்தக் குழு ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தான் ஹைலைட் (Democracy).
இவ்வாறு ஏற்றமுடன் இருந்த இந்தியப் பொருளாதாரம், பிரிட்டிஷாரின் வரவுக்குப் பிறகு நிர்மூலமாகி, ஏழை நாடாகி விட்டது. இன்று மறுபடியும் பொருளாதாரம் வளர்ச்சி பெற தொடங்கியிருக்கிறது மேலும் படிக்க
சரி..அது கிடக்கட்டும். ஆனால பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய பொருளாதாரம், வர்த்தகம் எப்படி இருந்தது என்பதை கொஞ்சம் அலசிப் பார்க்கும் பொழுது சுவரசியமான பல தகவல்கள் கிடைக்கின்றன.
அக் கால சோழ மன்னர்களான ராஜராஜ சோழன், ராஜேந்திரச் சோழன் போன்றோர் தன் ஆளுமையையும், அதிகாரத்தையும் நிலைநாட்ட மட்டுமில்லாமல் பொருளாதார காரணங்களுக்காகவுமே சேர, பாண்டிய, இலங்கை, சுமத்ரா, பர்மா, கடாரம் (தற்போதைய மலேசியா), மாலத் தீவுகள் போன்ற நாடுகளின் மீது படை எடுத்தனர். தன் நாட்டு வணிகர்களுக்கும்,
பொருளாதாரத்திற்கும் ஏற்பட்ட அச்சுறுத்தல் காரணமாகவே பலப் போர்களை சோழ மன்னர்கள் தொடுத்தார்கள். ஸ்ரீவிஜய நாட்டின் மீது போர் தொடுத்த ராஜேந்திரச் சோழன் தன் வணிகர்களுக்கு இடையுறு செய்த மன்னர்களுக்குப் பாடம் புகட்டியப் பிறகு, அவர்களிடமே ஆட்சியை ஓப்படைத்து விட்டான். தன் வணிகர்களுக்கு பாதுகாப்பை ஏற்படுத்திக் கொடுத்தான்.
இந்த வர்த்தகச் சூழநிலையைக் கொஞ்சம் அலசுவோம்
சுமத்ரா தீவுகள், கடாரம், பர்மா போன்ற பகுதிகள் ஸ்ரீவிஜய நாடு என்று அழைக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலத்தில், அந் நாட்டை ஆண்ட மன்னன் பெயர் சூடாமணிவர்மன். ஸ்ரீவிஜய நாட்டுக்கும், சோழ நாட்டுக்கும் இடைய நல்லுறவும் வர்த்தக தொடர்பும் இருந்தது. சோழ சம்ராஜ்யத்திற்கு வர்த்தகம் செய்ய ஏராளமான வர்த்த்கர்கள் ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து வருவார்கள். கடாரத்து இரும்பு, தேக்கு மரங்கள் போன்றவை ஸ்ரீவிஜய நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. அது போலவே சோழ நாட்டில் விவசாயம் செழித்தோங்கியதால் மிகுதியான தானியங்கள், ஏலம், மிளகு, நெசவுப் பொருட்கள் போன்றவை தெற்காசிய மற்றும் சீனா, அரபு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. சுமத்ரா மட்டுமல்லாமல் சீனா மற்றும் அரபு நாடுகளில் இருந்தும் வர்த்தகர்கள் சோழ நாட்டில் வணிகம் செய்து கொண்டிருந்தனர். வர்த்தகத்தில் நாகப்பட்டினம் துறைமுகம் தான் முக்கிய இடம் வகித்தது. சோழ நாட்டில் பல வர்த்தக குழக்களையும் ஏற்படுத்தினார்கள் . பல பொருட்களில் வர்த்தகம் நடைப்பெற்றது
ஸ்ரீவிஜய நாட்டுடன் நல்லுறவாகச் சென்று கொண்டிருந்த வர்த்தகம், ராஜேந்திரச் சோழன் காலத்தில் பிரச்சனைகளை எதிர்கொண்டது. சூடாமணிவர்மன் காலத்திற்குப் பிறகு வந்த ஸ்ரீவிஜய மன்னர்கள் சோழர்களின் வர்த்தகத்திற்கு இடையூறுகளை ஏற்படுத்தினார்கள். குறிப்பாக சோழ நாட்டிற்கும், சீனாவிற்கும் இடைய இருந்த வர்த்தகத்தை சீர்குலைக்கும் முயற்ச்சியிலோ, அல்லது சீனாவுடன் தங்களுடைய வர்த்தகத்தை மேம்படுத்தி சோழ நாட்டு வர்த்தகத்தை பாதிப்படையச் செய்யும் செயலிலோ, ஸ்ரீவிஜய மன்னர்கள் ஈடுபட்டதாகக் கருதப்படுகிறது. தன் வர்த்தகத்திற்கு இடையூறு ஏற்ப்பட்டதால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரச் சோழன் தனது கடற்ப்படையைக் கொண்டு ஸ்ரீவிஜயா நாட்டின் மீது 1025ம் ஆண்டு போர் தொடுத்தான் (உலக வர்த்தகத்தில் நிகழ்ந்த பல்வேறு முக்கிய நிகழ்வுகளைக் குறிக்கும் இணையத் தளத்தில் இந்த நிகழ்வும் இடம் பெற்றுள்ளது)
போரில் வெற்றிப் பெற்ற ராஜேந்திரச் சோழன், அந் நாட்டை தானே ஆட்சி செய்யாமல், அம் மன்னர்களிடமே ஆட்சியை ஒப்படைத்து விட்டு, ஸ்ரீவிஜய நாட்டை, கப்பம் கட்டும் ஒரு குறிநில நாடாக, சோழ சாம்ராஜ்யத்தின் கீழ் கொண்டு வந்தான்.அது போலவே சோழ மன்னர்களின் வர்த்தகத்திற்கு பெரும் சவாலாக விளங்கியவர்கள் அரபு நாட்டைச் சேர்ந்தவர்கள். தெற்காசிய நாடுகளில் தங்களது வர்த்தகம் அரபு நாட்டை சேர்ந்தவர்களால் பாதிப்படையக் கூடும் என்று கருதிய சோழர்கள் அவர்களின் வர்த்தகத்தை தடுக்க முனைந்தார்கள். அரபு நாடுகள் மீது அவர்களால் படையெடுக்க இயலாத சூழ்நிலையில், அவர்களின் வர்த்தக மையங்களாக விளங்கிய மாலத்தீவுகள், மலபார் பகுதிகள் (சேர நாடு) மற்றும் இலங்கை போன்ற நாடுகளின் மீது படையெடுத்து, அந் நாடுகளைத் தங்களின் ஆளுமைக்கு கொண்டு வந்தார்கள். இதன் மூலம் தங்கள் வர்த்தகத்தை பாதுகாத்துக் கொண்டார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், அரபு நாட்டுடனும் சோழர்கள் வர்த்தகம் செய்துள்ளார்கள். தங்கள் வர்த்தகம் செழிக்க வேண்டும், ஆனால் தங்களுடன் போட்டியிடுபவர்களின் வர்த்தக தளங்களை அழிக்க வேண்டும் என்ற எண்ணமே பலப் போர்களுக்கு காரணமாக இருந்திருக்கிறது. இவ்வாறு தான் இலங்கையின் தலைநகராக விளங்கிய அணுராதாபுரத்தை நிர்மூலமாக்கி, தங்களுக்கு வசதியான இடத்தில் புதிய தலைநகரை உருவாக்கினார்கள்.
சோழ நாட்டின் பொருளாதாரம் தற்பொழுது உள்ளது போலவே வரி விதிப்பு மூலமே நிர்வாகிக்கப்பட்டது. நில வரி மட்டுமல்லாமல், வர்த்தக வரியும் விதிக்கப்ப்ட்டது. வர்த்தகம் செழித்தோங்கினால் தான் தங்களுக்கு வரி கிடைக்கும், என்ற எண்ணமே, தங்கள் வர்த்தகத்திற்குப் பாதிப்பு ஏற்பட்ட பொழுதெல்லாம் அவர்களை போர் செய்யத் தூண்டியது.
பொருளாதாரம் மட்டுமில்லாமல் சோழ நாட்டைப் போன்ற மாபொரும் சாம்ராஜயத்தை நிர்வகிக்க கல்வி மிக முக்கியம் எனக் கருதிய சோழர்கள், கோயில்களில் கல்விச் சாலைகளை தோற்றுவித்தார்கள் (Human Resouce Development). சமய நூல்கள் மட்டுமல்லாது கணிதம், வானசாஸ்திரம் போன்றவையும் இந்தக் கல்விச் சாலைகளில் கற்றுத்தரப்பட்டது. அக் காலத்தில் சோழ நாட்டில் படிப்பறிவு அதிகமிருந்ததாக தெரிகிறது.
மிகப் பெரிய சாம்ராஜ்யத்தை நிர்வாகம் செய்ய கிரமங்களில் நிர்வாகக் குழுக்களை ஏற்படுத்தினார்கள். கிராம நிர்வாகங்களை கவனித்தல், வரி விதித்தல், சட்டம் ஒழுங்கு, உணவு சேமிப்பு போன்றவை இந்தக் கிராமக் குழுக்களிடமே இருந்தது (Decentralization). இந்தக் குழு ஓட்டெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படும் என்பது தான் ஹைலைட் (Democracy).
இவ்வாறு ஏற்றமுடன் இருந்த இந்தியப் பொருளாதாரம், பிரிட்டிஷாரின் வரவுக்குப் பிறகு நிர்மூலமாகி, ஏழை நாடாகி விட்டது. இன்று மறுபடியும் பொருளாதாரம் வளர்ச்சி பெற தொடங்கியிருக்கிறது மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/03/2005 07:20:00 AM 13 comments:
Sunday, January 02, 2005
பழையன நினைந்து புதியன புகுவோம்
இந்தியப் பங்குச் சந்தைக்கும் பொருளாதாரத்துக்கும் 2004 ஆம் ஆண்டு மிகவும் லாபகரமான ஆண்டு. வரலாறு காணாத உயர்வைப் பங்குச் சந்தை பெற்றிருக்கிறது. 2004ம் ஆண்டு துவக்கத்தில் 5838 புள்ளிகளுடன் இருந்த BSE
குறியீடு தற்பொழுது 6602ல் இருக்கிறது. சுமார் 760 புள்ளிகள் உயர்வைப் பெற்றுள்ளது. இது சுமார் 13% வளர்ச்சி. இது போலவே தேசிய பங்குச் சந்தை 1877 ல் தொடங்கி 2,080க்கு உயர்ந்து, சுமார் 11% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட துவக்கத்தில் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்ததாலும் பாரதிய ஜனதா "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சாரத்தை தேர்தலில் முன்வைத்தது. பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று விடும் என்ற எண்ணத்தில் வலுவாக சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, காங்கிரஸ் வெற்றிப் பெற்று, இடதுசாரிகள் ஆதரவுடன் அரசமைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது ஒரே நாளில், மே மாதம் 17ம் தேதி, குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்தது.
இந்தச் சரிவு அரசியல் மாற்றங்களினாலும், இடது சாரிகளை உள்ளடக்கிய மைய அரசு எந்தளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற அச்சத்தினாலுமே நிகழ்ந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம்
வலுவாகவே இருந்தது. அடுத்து வந்த வாரங்களில் பங்குச் சந்தை ஒரளவுக்கு உயர்ந்தது என்றாலும், புதிய அரசின் பொருளாதார கொள்கைகளைப் பற்றிய தெளிவு இல்லாததால், பல நாட்கள் சந்தையில் அதிக சரிவும் இல்லாமல், உயர்வும் இல்லாமல் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
ஜுலை மாதம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்குப் பிறகே வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி பங்குச் சந்தையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற பொழுது நடந்த பங்குச் சரிவுக்கு ஸ்பேக்குலேசன் தான் முக்கிய காரணம் என்று கருதிய அரசு தேவையில்லாமல் ஸ்பேக்குலேசன் செய்து சந்தையை சரிவடையச் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பங்கு பரிவர்த்தனை வரியை விதித்தது. ஒரு நல்ல அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்தாலும், பங்கு பரிவர்த்தனை வரியை ஏற்காமல் பங்குச் சந்தை சரிந்தது. இந்த வரி விகிதம் பங்குத் தரகர்களின் வேண்டுகளுக்கிணங்க பிறகு ஓரளவு குறைக்கப்பட்டது.
குறியீடு 6000ஐ நெருங்கினாலே அதிகம் என அனைவரும் எண்ணிய சூழ்நிலையில், அரசின் பொருளாதார கொள்கை மேல் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டு பங்குச் சந்தை இன்று 6600ஐ எட்டி விட்டது. இதில் பெரும்பாலான உயர்வு கடந்த இரு மாதங்களில் தான் நிகழ்ந்தது.
இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 2004ல் தான் குவிந்தது. ரூபாய் 38,965 கோடி (8.5 பில்லியன் டாலர்) அளவுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் (FII) முதலீடு செய்யப்பட்டது.
அதே போல பல நிறுவனங்கள் தங்களது பங்குகளை பொது விற்பனைக்கு வெளியிட்டன (IPO). TCS சுமார் 5,500 கோடிக்கும், NTPC சுமார் 5000 கோடிக்கும் பங்குகளை வெளியிட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 30,500 கோடி
ரூபாய் IPO மூலம் திரட்டப்பட்டது.
குறியீட்டுப் பங்குகளில், பார்தி பங்குகள் (ஏர்டெல் செல்பேசி நிறுவனம்) தான் இந்த வருடம் அதிக லாபம் கண்டது. 110 ரூபாயில் இருந்த இந்தப் பங்குகளின் தற்போதைய விலை ரூ215. சுமார் 100% உயர்வு. இதைப் போல இன்போசிஸ் பங்குகளும் மிக அதிக அளவில், சுமார் 50% உயர்வைப் பெற்றிருந்தன.
இந்த ஆண்டு கடும் சரிவுற்றப் பங்கு இந்துஸ்தான் லீவர் (HLL) தான். கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த விலைக்கு இந்தப் பங்குகள் சரிந்தன. சுமார் 30% வீழ்ச்சி.
இந்த ஆண்டு அதிக உயர்வைப் பெற்றது MIDCAP எனப்படும் நடுத்தரமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் தான். பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இந்தியப் பொருளாதாரம் வளரும் சூழ்நிலையில் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்று கொண்டிருக்கிறது. அதனால் வரும் ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்கக்கூடும்
இந்த ஆண்டு (2005)
கொஞ்சம் சிக்கலான, குழப்பமான மனநிலையில் தான் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டில் பங்குச் சந்தையின் அபரிதமான எழுச்சி எல்லோரையும் அச்சப்படுத்தி உள்ளது. பங்குகளின் விலை ஏறுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கிக் குவித்ததால் தான் கடந்த ஆண்டு சந்தை லாபம் பெற்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் படசத்தில் சந்தை சரியக் கூடும். சந்தையின் போக்கினை, நம்மால் தெளிவாக கணிக்க இயலாது. வரும் வாரங்களில் நிகழக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து தான் சந்தையின் போக்கு இருக்கும்.
இம் மாதம், பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யத் தொடங்கும். சனவரி 12ம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்தக் காலாண்டில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது எல்லா ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கும். அதிலும், சுமார் 80% மென்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் செய்யப்படுகிறது என்பதால் மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறையக் கூடும். இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களை இத்தகைய அந்நியச் செலவாணி ஏற்ற இறக்கங்களில் இருந்து FX Forwards போன்ற ஓப்பந்தங்கள் மூலமாக தற்காத்துக் கொள்ளும். ரூபாயின் மதிப்பு உயருவதால், வரும் காலாண்டிற்கு புதியதாக செய்யப்படும் FX Forwards ஒப்பந்தகங்களின் மதிப்பும் உயரும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் லாபம் குறையும். எனவே மென்பொருள் பங்குகள் சரியும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த ஆண்டுடன் ஜவுளிக்கான கோட்டா முறை முடிவடைகிறது. இதனால் ஜவுளி நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என்று கருதப்படுகிறது. இந்தத் துறையின் பங்குகள் கவனத்திற்குரியவை.
அது போலவே இந்த ஆண்டுடன் பேடண்ட முறை அமலுக்கு வருகிறது. இது பார்மா (Pharma) நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்களின் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகக் கூடும்.
அடுத்த மாதம் நிதியமைச்சர் தன்னுடைய அரசின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பற்றாக்குறை குறைப்பு, உள்கட்டமைப்புக்கு ஏற்றம் தரும் திட்டங்கள், அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள், அரசால் விதிக்கப்படும் மற்றும் குறைக்கப்படும் வரிகள், வருவாயைப் பெருக்குவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள், தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் எனப் பல பிரச்சனைகளை எப்படி நிதி நிலை அறிக்கை கையாளுகிறதோ அதைச் சார்ந்தே பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் அமையும்.
பங்குச் சந்தை சில நேரங்களில் சரிவடையலாம், பின் உயரலாம். நல்ல நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலமாகவே நாம் லாபம் பார்க்க இயலும். அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.
கடந்த ஆண்டில் பல சாதனைகள் நடந்திருக்கிறது. புது ஆண்டிலும் அதைப் போல சாதனைகள் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய நினைவுகளுடன் புதிய ஆண்டில் புகுவோம். பழையன நினைந்து புதியன புகுவோம்.
இந்தப் புத்தாண்டில் உங்கள் பணம் பெருகட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க
குறியீடு தற்பொழுது 6602ல் இருக்கிறது. சுமார் 760 புள்ளிகள் உயர்வைப் பெற்றுள்ளது. இது சுமார் 13% வளர்ச்சி. இது போலவே தேசிய பங்குச் சந்தை 1877 ல் தொடங்கி 2,080க்கு உயர்ந்து, சுமார் 11% வளர்ச்சியைப் பெற்றுள்ளது. இந்த வருட துவக்கத்தில் பங்குச் சந்தை வரலாறு காணாத உயர்வை அடைந்ததாலும், இந்தியப் பொருளாதாரம் வலுவாக இருந்ததாலும் பாரதிய ஜனதா "இந்தியா ஒளிர்கிறது" என்ற பிரச்சாரத்தை தேர்தலில் முன்வைத்தது. பாரதிய ஜனதா வெற்றிப் பெற்று விடும் என்ற எண்ணத்தில் வலுவாக சென்று கொண்டிருந்த பங்குச் சந்தை, காங்கிரஸ் வெற்றிப் பெற்று, இடதுசாரிகள் ஆதரவுடன் அரசமைத்தாக வேண்டிய சூழ்நிலை ஏற்பட்ட பொழுது ஒரே நாளில், மே மாதம் 17ம் தேதி, குறியீடு 800 புள்ளிகள் சரிவடைந்தது.
இந்தச் சரிவு அரசியல் மாற்றங்களினாலும், இடது சாரிகளை உள்ளடக்கிய மைய அரசு எந்தளவுக்கு பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொள்ளும் என்ற அச்சத்தினாலுமே நிகழ்ந்தது. இந்தியப் பொருளாதாரத்தின் அடித்தளம்
வலுவாகவே இருந்தது. அடுத்து வந்த வாரங்களில் பங்குச் சந்தை ஒரளவுக்கு உயர்ந்தது என்றாலும், புதிய அரசின் பொருளாதார கொள்கைகளைப் பற்றிய தெளிவு இல்லாததால், பல நாட்கள் சந்தையில் அதிக சரிவும் இல்லாமல், உயர்வும் இல்லாமல் வர்த்தகம் மந்தமாகவே இருந்தது.
ஜுலை மாதம் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தால் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கைக்குப் பிறகே வர்த்தகம் சூடு பிடிக்கத் தொடங்கியது. நிதியமைச்சரால் அறிவிக்கப்பட்ட பங்கு பரிவர்த்தனை வரி பங்குச் சந்தையில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. காங்கிரஸ் வெற்றிப் பெற்ற பொழுது நடந்த பங்குச் சரிவுக்கு ஸ்பேக்குலேசன் தான் முக்கிய காரணம் என்று கருதிய அரசு தேவையில்லாமல் ஸ்பேக்குலேசன் செய்து சந்தையை சரிவடையச் செய்பவர்களைக் கட்டுப்படுத்த பங்கு பரிவர்த்தனை வரியை விதித்தது. ஒரு நல்ல அறிக்கையை நிதியமைச்சர் தாக்கல் செய்திருந்தாலும், பங்கு பரிவர்த்தனை வரியை ஏற்காமல் பங்குச் சந்தை சரிந்தது. இந்த வரி விகிதம் பங்குத் தரகர்களின் வேண்டுகளுக்கிணங்க பிறகு ஓரளவு குறைக்கப்பட்டது.
குறியீடு 6000ஐ நெருங்கினாலே அதிகம் என அனைவரும் எண்ணிய சூழ்நிலையில், அரசின் பொருளாதார கொள்கை மேல் ஒரு நம்பகத்தன்மை ஏற்பட்டு பங்குச் சந்தை இன்று 6600ஐ எட்டி விட்டது. இதில் பெரும்பாலான உயர்வு கடந்த இரு மாதங்களில் தான் நிகழ்ந்தது.
இந்தியப் பங்குச் சந்தை வரலாற்றிலேயே அதிக அளவில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களின் முதலீடு 2004ல் தான் குவிந்தது. ரூபாய் 38,965 கோடி (8.5 பில்லியன் டாலர்) அளவுக்கு பங்குச் சந்தையில் வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்களால் (FII) முதலீடு செய்யப்பட்டது.
அதே போல பல நிறுவனங்கள் தங்களது பங்குகளை பொது விற்பனைக்கு வெளியிட்டன (IPO). TCS சுமார் 5,500 கோடிக்கும், NTPC சுமார் 5000 கோடிக்கும் பங்குகளை வெளியிட்டன. இந்த ஆண்டு மட்டும் சுமார் 30,500 கோடி
ரூபாய் IPO மூலம் திரட்டப்பட்டது.
குறியீட்டுப் பங்குகளில், பார்தி பங்குகள் (ஏர்டெல் செல்பேசி நிறுவனம்) தான் இந்த வருடம் அதிக லாபம் கண்டது. 110 ரூபாயில் இருந்த இந்தப் பங்குகளின் தற்போதைய விலை ரூ215. சுமார் 100% உயர்வு. இதைப் போல இன்போசிஸ் பங்குகளும் மிக அதிக அளவில், சுமார் 50% உயர்வைப் பெற்றிருந்தன.
இந்த ஆண்டு கடும் சரிவுற்றப் பங்கு இந்துஸ்தான் லீவர் (HLL) தான். கடந்த ஏழு ஆண்டுகளில் இல்லாத மிகக் குறைந்த விலைக்கு இந்தப் பங்குகள் சரிந்தன. சுமார் 30% வீழ்ச்சி.
இந்த ஆண்டு அதிக உயர்வைப் பெற்றது MIDCAP எனப்படும் நடுத்தரமான சந்தை மதிப்பு கொண்ட நிறுவனங்கள் தான். பெரிய நிறுவனங்களை விட சிறிய நிறுவனங்களில் தான் வளர்ச்சி அதிகமாக இருந்தது. இந்தியப் பொருளாதாரம் வளரும் சூழ்நிலையில் சிறிய நிறுவனங்கள் பெரிய நிறுவனங்களாக வளர்ச்சிப் பெற்று கொண்டிருக்கிறது. அதனால் வரும் ஆண்டுகளிலும் இதே நிலை நீடிக்கக்கூடும்
இந்த ஆண்டு (2005)
கொஞ்சம் சிக்கலான, குழப்பமான மனநிலையில் தான் முதலீட்டாளர்கள் உள்ளார்கள். கடந்த ஆண்டில் பங்குச் சந்தையின் அபரிதமான எழுச்சி எல்லோரையும் அச்சப்படுத்தி உள்ளது. பங்குகளின் விலை ஏறுமா என்பது தான் எல்லோருடைய கேள்வியும். வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் பங்குகளை வாங்கிக் குவித்ததால் தான் கடந்த ஆண்டு சந்தை லாபம் பெற்றது. ஆனால் அவர்கள் தங்களுடைய முதலீடுகளை விலக்கிக் கொள்ளும் படசத்தில் சந்தை சரியக் கூடும். சந்தையின் போக்கினை, நம்மால் தெளிவாக கணிக்க இயலாது. வரும் வாரங்களில் நிகழக் கூடிய நிகழ்வுகளைப் பொறுத்து தான் சந்தையின் போக்கு இருக்கும்.
இம் மாதம், பல நிறுவனங்கள் தங்களது காலாண்டு அறிக்கைகளை தாக்கல் செய்யத் தொடங்கும். சனவரி 12ம் தேதி இன்போசிஸ் நிறுவனம் தனது காலாண்டு அறிக்கையை தாக்கல் செய்யும் என்று தெரிகிறது. இந்தக் காலாண்டில் டாலரின் மதிப்பு வீழ்ச்சியடைந்தது எல்லா ஏற்றுமதியாளர்களையும் பாதிக்கும். அதிலும், சுமார் 80% மென்பொருள் ஏற்றுமதி அமெரிக்காவிற்கு தான் செய்யப்படுகிறது என்பதால் மென்பொருள் நிறுவனங்களின் லாபம் குறையக் கூடும். இன்போசிஸ் போன்ற பெரிய நிறுவனங்கள் தங்களை இத்தகைய அந்நியச் செலவாணி ஏற்ற இறக்கங்களில் இருந்து FX Forwards போன்ற ஓப்பந்தங்கள் மூலமாக தற்காத்துக் கொள்ளும். ரூபாயின் மதிப்பு உயருவதால், வரும் காலாண்டிற்கு புதியதாக செய்யப்படும் FX Forwards ஒப்பந்தகங்களின் மதிப்பும் உயரும். அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களின் லாபம் குறையும். எனவே மென்பொருள் பங்குகள் சரியும் வாய்ப்பு இருக்கிறது.
இந்த ஆண்டுடன் ஜவுளிக்கான கோட்டா முறை முடிவடைகிறது. இதனால் ஜவுளி நிறுவனங்களின் ஏற்றுமதி வாய்ப்பு பெருகும் என்று கருதப்படுகிறது. இந்தத் துறையின் பங்குகள் கவனத்திற்குரியவை.
அது போலவே இந்த ஆண்டுடன் பேடண்ட முறை அமலுக்கு வருகிறது. இது பார்மா (Pharma) நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக இருக்கும். அவர்களின் ஏற்றுமதி வாய்ப்புகளும் பெருகக் கூடும்.
அடுத்த மாதம் நிதியமைச்சர் தன்னுடைய அரசின் இரண்டாவது நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வார். இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. பற்றாக்குறை குறைப்பு, உள்கட்டமைப்புக்கு ஏற்றம் தரும் திட்டங்கள், அந்நிய நேரடி முதலீடுகளைப் பெருக்குவதற்கான நடவடிக்கைகள், அரசால் விதிக்கப்படும் மற்றும் குறைக்கப்படும் வரிகள், வருவாயைப் பெருக்குவதற்காக செய்யப்படும் நடவடிக்கைகள், தொழில்துறைக்கு தரப்படும் சலுகைகள் எனப் பல பிரச்சனைகளை எப்படி நிதி நிலை அறிக்கை கையாளுகிறதோ அதைச் சார்ந்தே பங்குச் சந்தையின் உயர்வும், தாழ்வும் அமையும்.
பங்குச் சந்தை சில நேரங்களில் சரிவடையலாம், பின் உயரலாம். நல்ல நிறுவனங்களின் பங்குகளை தேர்ந்தெடுத்து முதலீடு செய்வதன் மூலமாகவே நாம் லாபம் பார்க்க இயலும். அவ்வப்பொழுது நிகழும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட காலத்திற்காக முதலீடு செய்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும்.
கடந்த ஆண்டில் பல சாதனைகள் நடந்திருக்கிறது. புது ஆண்டிலும் அதைப் போல சாதனைகள் நடக்கும் சாத்தியக் கூறுகள் உள்ளன. பழைய நினைவுகளுடன் புதிய ஆண்டில் புகுவோம். பழையன நினைந்து புதியன புகுவோம்.
இந்தப் புத்தாண்டில் உங்கள் பணம் பெருகட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/02/2005 01:20:00 PM 1 comment:
புதிய வாய்ப்புகள், சவால்கள்
இந்த ஆண்டில் இருந்து கோட்டா முறை ஜவுளித் துறையில் விலக்கிக் கொள்ளப்படுவதால், ஜவுளித் துறைக்கு ஏற்றுமதி வாய்ப்புகள் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா நாடுகள் தங்களுக்கு தேவையான ஜவுளிப் பொருட்களை இறக்குமதி செய்யும் பொழுது ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு குறிப்பிட்ட விகிதாச்சாரம் ஒதுக்கி அந்த அளவுக்கு மட்டுமே அந்த நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்யும். உதாரணமாக தன் தேவையில் 10% சதவீதத்தை பாக்கிஸ்தானில் இருந்தும், 15% பங்களாதேஷில் இருந்தும், 10% இலங்கையில் இருந்தும் இறக்குமதி செய்யும். ஒதுக்கப்பட்ட கோட்டாவுக்கு அதிகமாக அந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யாது. இதனால் ஏற்படும் நன்மை, குறிப்பிட்ட நாடுகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அளவுக்கு ஏற்றுமதியை நிச்சயமாக பெற முடியும்.
இந்த கோட்டா முறை உலக வர்த்தக சங்கம் (WTO) சட்டதிட்டங்களின் உருவாக்கப்பட்ட Agreement on Textiles and Clothing (ATC) என்ற ஒப்பந்தப் படி சனவரி 1, 2005 முதல் விலக்கப்படுகிறது. கோட்டா முறையால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7% ஜவுளித் துறையைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்கு 25%. ஆனால் உலகின் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3% என்ற சொற்ப அளவில் தான் உள்ளது. இந்த கோட்டா முறை விலக்கப்படுவதால் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளுக்குமே இந்த வாய்ப்பு இருப்பதால், பிற நாடுகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு தான் வய்ப்புகளை பெற முடியும்.
குறிப்பாக சீனாவின் கடும் சவாலை இந்தியா சந்தித்தாக வேண்டிய சூழ்நிலை. 2002ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஜவுளித் துறையின் சிலப் பிரிவுகளில் கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பொழுது,
இத்துறைகளில் 9%மாக இருந்த சீனாவின் பங்கு 45%மாக உயர்ந்தது. இது மேலும் உயர்ந்து 70% ஐ எட்டும் என்று கருதப்படுகிறது. 2002ல் அமெரிக்காவின் மொத்த ஜவுளி சந்தையில் சீனாவின் பங்கு 16%. கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இது 50%ஐ தாண்டும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு மட்டுமல்லாது, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.
சவால்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் இருந்து நிச்சயமாக முன்னேற்றம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஏராளமான வாய்ப்பு இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கிறது. எந்தளவுக்கு நாம் அதனைப் பயன்படுத்தி கொள்கிறோம், பிற நாடுகள் கொடுக்கும் சவால்களை எதிர்கொள்கிறோம், தரமான உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும்.
அடுத்த வாய்ப்பு பார்மா (Pharma) துறையில், புதிய பேடண்ட் (patent) சட்டம் அமலுக்கு வருவதன் மூலமாக கிடைத்திருக்கிறது. இது வரையில் இருந்த மருத்து தயாரிப்புமுறைக்கான காப்புரிமை (process patents) நீங்கி, தயாரிக்கப்பட்ட பொருளுக்கான காப்புரிமை அமலுக்கு வருகிறது (product patents). இதனால் சுமார் 90% மேற்பட்ட மருந்துகள் காப்புரிமை பெற்றப் பிரிவில் இருந்து நீங்குகிறது. இவ்வாறு கிடைக்கும் உற்பத்தி வாய்ப்புகள் மட்டும் பல பில்லியன்கள்.
அமெரிக்காவின் USFDA எனப்படும் Food and Drug Administration அங்கீகாரம் பெற்ற 70க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர அமெரிக்காவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மென்பொருள் துறையில் உள்ளது போல இந்தியாவிற்கு தனது தயாரிப்புகளை (Outsourcing) மாற்றும் வாய்ப்புகளும் இருக்கிறது.
இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான ரேன்பேக்சி, சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா போன்ற நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருக்கிறது
மென்பொருள் துறை வளர்ச்சிப் பெற்றது போலவே, பார்மா மற்றும் ஜவுளித் துறைகளும் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த இரு துறைகளின் வளர்ச்சி, தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக கவனிக்கப்படும்.
மேலும் படிக்க
இந்த கோட்டா முறை உலக வர்த்தக சங்கம் (WTO) சட்டதிட்டங்களின் உருவாக்கப்பட்ட Agreement on Textiles and Clothing (ATC) என்ற ஒப்பந்தப் படி சனவரி 1, 2005 முதல் விலக்கப்படுகிறது. கோட்டா முறையால் குறிப்பிட்ட அளவிற்கு மட்டுமே ஏற்றுமதி செய்து கொண்டிருந்த இந்தியாவிற்கு வாய்ப்புகள் அதிகமாகிறது.
இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7% ஜவுளித் துறையைச் சார்ந்தே இருக்கிறது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதியில் ஜவுளித் துறையின் பங்கு 25%. ஆனால் உலகின் ஜவுளி ஏற்றுமதியில் இந்தியாவின் பங்கு 3% என்ற சொற்ப அளவில் தான் உள்ளது. இந்த கோட்டா முறை விலக்கப்படுவதால் இந்தியா அதிக அளவில் ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எல்லா நாடுகளுக்குமே இந்த வாய்ப்பு இருப்பதால், பிற நாடுகளுடன் கடுமையாகப் போட்டியிட்டு தான் வய்ப்புகளை பெற முடியும்.
குறிப்பாக சீனாவின் கடும் சவாலை இந்தியா சந்தித்தாக வேண்டிய சூழ்நிலை. 2002ல் அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஜவுளித் துறையின் சிலப் பிரிவுகளில் கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பொழுது,
இத்துறைகளில் 9%மாக இருந்த சீனாவின் பங்கு 45%மாக உயர்ந்தது. இது மேலும் உயர்ந்து 70% ஐ எட்டும் என்று கருதப்படுகிறது. 2002ல் அமெரிக்காவின் மொத்த ஜவுளி சந்தையில் சீனாவின் பங்கு 16%. கோட்டா முறை விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு இது 50%ஐ தாண்டும் என்று அமெரிக்க பொருளாதார வல்லுனர்கள் கருதுகின்றனர். சீனாவின் இந்த வளர்ச்சி இந்தியாவிற்கு மட்டுமல்லாது, பாக்கிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளுக்கும் கடும் சவாலாக இருக்கும்.
சவால்கள் இருந்தாலும், தற்போதைய நிலையில் இருந்து நிச்சயமாக முன்னேற்றம் இருக்கிறது என்பதில் ஐயமில்லை. ஏராளமான வாய்ப்பு இப்பொழுது நமக்கு கிடைத்திருக்கிறது. எந்தளவுக்கு நாம் அதனைப் பயன்படுத்தி கொள்கிறோம், பிற நாடுகள் கொடுக்கும் சவால்களை எதிர்கொள்கிறோம், தரமான உற்பத்தித் திறனைப் பெருக்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே நமது வெற்றி அமையும்.
அடுத்த வாய்ப்பு பார்மா (Pharma) துறையில், புதிய பேடண்ட் (patent) சட்டம் அமலுக்கு வருவதன் மூலமாக கிடைத்திருக்கிறது. இது வரையில் இருந்த மருத்து தயாரிப்புமுறைக்கான காப்புரிமை (process patents) நீங்கி, தயாரிக்கப்பட்ட பொருளுக்கான காப்புரிமை அமலுக்கு வருகிறது (product patents). இதனால் சுமார் 90% மேற்பட்ட மருந்துகள் காப்புரிமை பெற்றப் பிரிவில் இருந்து நீங்குகிறது. இவ்வாறு கிடைக்கும் உற்பத்தி வாய்ப்புகள் மட்டும் பல பில்லியன்கள்.
அமெரிக்காவின் USFDA எனப்படும் Food and Drug Administration அங்கீகாரம் பெற்ற 70க்கும் மேற்பட்ட மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இருக்கின்றன. அமெரிக்காவிற்கு அடுத்து அதிக அளவில் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்கள் இந்தியாவில் தான் உள்ளன. இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் ஏற்றுமதி அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இது தவிர அமெரிக்காவில் இருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் மென்பொருள் துறையில் உள்ளது போல இந்தியாவிற்கு தனது தயாரிப்புகளை (Outsourcing) மாற்றும் வாய்ப்புகளும் இருக்கிறது.
இதனால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்களான ரேன்பேக்சி, சிப்லா, டாக்டர் ரெட்டிஸ் லேப், சன் பார்மா போன்ற நிறுவனங்களுக்கு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளது. மேலும் அமெரிக்க நிறுவனங்களும் இந்தியாவில் உற்பத்தி செய்யும் வாய்ப்பு இருக்கிறது
மென்பொருள் துறை வளர்ச்சிப் பெற்றது போலவே, பார்மா மற்றும் ஜவுளித் துறைகளும் பெருகுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் இந்த இரு துறைகளின் வளர்ச்சி, தற்போதைய சூழ்நிலையில் முக்கியமாக கவனிக்கப்படும்.
மேலும் படிக்க
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI நேரம் 1/02/2005 01:04:00 PM No comments:
Subscribe to:
Posts (Atom)