இன்று கிரிக்கெட் பார்த்துகிட்டே பங்குச் சந்தையில் "Intra Day Trading" பண்ணலாம்னு முடிவு பண்ணி ஆபிசுக்கு மட்டம் போட்டுட்டு கணிணி முன்னால உட்கார்ந்தேன். இந்த இண்ட்ரா டே வர்த்தகம் ரொம்ப ரிஸ்க்கான வேலை. நல்லா பணம் பார்க்கலாம். நஷ்டம் வந்தாலும் அதிகமா வரும்.
அதைப் போல இந்தப் பங்கு இந்த நாளில் இப்படித் தான் போகும்னு கணிக்கனும். நேற்று லாபகரமா இருந்த மென்பொருள் பங்குகள் இன்னைக்கு சரிந்து விட்டது. லாபம் வந்தவரைக்கும் போதும்னு எல்லோரும் விற்க ஆரம்பிச்சிட்டாங்க.
அது என்ன "Intra Day/Margin Trading".
இன்றே பங்குகளை வாங்கி, விற்று விட வேண்டும்.
நம்மோட வங்கி கணக்குல பத்தாயிரம் இருக்குன்னு வச்சிக்குங்க. அத விட 7 மடங்கு அதிகமா பங்குகளை வாங்கி விற்க முடியும். அதாவது எழுபதாயிரம் ரூபாய்க்கு பங்குகளை வாங்கி விற்கலாம். இந்த அளவுக்கு பங்குத் தரகு நிறுவனங்கள் நமக்கு Exposure தருகின்றன.
சரி.. மறுபடியும் ஒரு கணக்கு
நேற்று இன்போசிஸ் பங்கு 100 ரூபாய் வரை விலை ஏறியது.
பங்குத் தரகு, பங்குப்பரிவர்த்தனை வரி என சில சமாச்சாரங்களும் இருக்குது. பங்குத் தரகு, நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடும். இணையம் மூலமாக வார்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகை அதிகம். தொலைபேசி மூலம் செய்யும் பொழுது குறைவு. சில நிறுவனங்கள், அவர்களின் மென்பொருள் மூலமாக வர்த்தகம் செய்யும் பொழுது தரகுத் தொகையை குறைத்து கொள்கின்றனர்.
தோராயமாக 15 பைசா (பங்குத் தரகு + பங்குப்பரிவர்த்தனை) என்று வைத்து கொள்வோம்.
வாங்கும் விலை
40 x 1740 = 69600
தரகு = 69600 x .0015 = 104.40
மொத்த வாங்கும் விலை = 69,704.40
விற்கும் விலை 1800 (லாபம் போது சாமி என்று இந்த விலைக்கு விற்றிருந்தால்)
விற்கும் விலை
40x 1800 = 72,000
தரகு = 72,000 x .0015 = 108
மொத்த விற்கும் விலை = 72,108.00
லாபம் = 2187.60
பத்தாயிரம் முதலீடுக்கு கிடைக்கும் லாபம் 2187.60
சரி...இதுவே 20 ரூபாய் கீழே சரிந்திருந்தால் ? ஆயிரம் ரூபாய் காணாமல் போய் இருக்கும். அந்த நாளில் பங்குகளின் ஏற்றத்தை சரியாக கணித்தால் லாபம் பார்க்கலாம்.
சரியும் பங்குகளில் கூட லாபம் பார்க்க முடியும். எப்படி ?
பங்குகள் விலையில் ஏற்றமும் இறக்கமும் இருக்கும். இறக்கத்தில் வாங்கி ஏற்றத்தில் விற்க வேண்டும். அந்த நாளில் பங்கு வர்த்தகத்தில் உள்ள நிலவரத்தைப் பொறுத்து இந்த ஏற்ற இறக்கங்கள் மாறுபடும். இன்று விப்ரோவின் விலை சரிந்து கொண்டே இருந்தது. ஆனாலும் அதன் fluctuations ஐ சரியான முறையில் பயன்படுத்தி கொண்டால் லாபம் பார்க்கலாம்.
இந்த ஏற்ற இறக்கங்களை தரகு நிறுவனங்கள் தரும் மென்பொருளில் உள்ள Real time charts மூலம் பார்க்கலாம். அதைக் கொண்டு வர்த்தகம் செய்யலாம்.
nseindia வில் உள்ள வரைப் படத்திற்கான சுட்டி
இந்த வர்த்தகத்தில் உள்ள தொல்லைகள்
கணிணித் திரையை பார்த்து கொண்டே இருக்க வேண்டும். சில நொடிகளுக்குள் பல மாற்றங்கள் நிகழலாம். லாபத்தில் இருந்த பங்கு நஷ்டத்தில் போகலாம்
சந்தை நிலவரத்தை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருக்க வேண்டும்
நாம் வாங்கியப் பங்கு நிச்சயமாக ஏறும் என தெரிந்தால் மட்டுமே தொடர்ந்து காத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் கிடைத்த வரைப் போதும் என்றோ குறைந்த நஷ்டத்திலோ விற்று விட வேண்டும்.
இந்த வர்த்தகத்திற்கு நம்மிடம் இருக்கும் மிகுதியான பணத்தை மட்டுமே பயன் படுத்த வேண்டும்.
நம்முடைய அவசர தேவைகளுக்கான பணத்தை இதில் கொண்டு வரவே கூடாது
Friday, October 15, 2004
ஒரே நாள் வர்த்தகம்
இடுகையிட்டது தமிழ் சசி | Tamil SASI | நேரம் 10/15/2004 11:11:00 AM
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
நீங்க என்ன day trader-ஆ?
12:09 PM, October 15, 2004பங்குகள் வாங்கி விற்க எந்த கம்பெனி மென்பொருள் உபயோகிக்கிறீங்க?
உங்க day trading strategy என்ன?
இந்திய பங்குகள் analysis, recommendations க்கு எந்த ஸைட் நல்லா இருக்குன்னு நினைக்கிறீங்க?
vanackam sasi
12:34 PM, October 16, 2004nam chenthamizhil sharemarket blog.
mudhal nanri technologycku
adutha onru manickavum palapala uncalucku
ennaiponra mudhal thalaimurai kalaihalucku unckal valihattalhal maelum vaendum.
nanri.
உங்கள் பின்னூட்டங்களுக்கு நன்றி
11:56 AM, November 06, 2004Post a Comment