பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

Wednesday, October 20, 2004

கரடியாட்டம்

கடந்த இரு நாட்களாக சந்தை நிலவரம் கடைசி ஒரு மணி நேரத்தில் பலமாக மாறியது. செவ்வாயன்று சம நிலையில் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேல் நோக்கி எழுந்ததால் BSE மற்றும் NSE குறியீடுகள் முறையே 58, 29 புள்ளிகள் லாபத்துடன் முடிவடைந்தது. இது யாருமே எதிர்பாராமல் நிகழ்ந்தது. சில அந்நிய நிறுவனங்களின் முதலீடு காரணமாக இந்த உயர்வு ஏற்பட்டது.

இன்றோ ஆரம்பத்தில் இருந்தே ஊசலாட்டத்துடன் இருந்த சந்தை கடைசி ஒரு மணி நேரத்தில் மேலும் கீழ் நோக்கி சரிந்து BSE 66 புள்ளிகள் சரிவுடன் 5,672 லும், NSE 19 புள்ளிகள் கீழ் நோக்கி சென்று 1,790 லும் வர்த்தகம் முடிவடைந்தது.

இன்று சத்யம் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன. இரண்டாம் காலாண்டில் அனைவரும் எதிர்பார்த்ததை விட மிக அதிக லாபத்தை சத்யம் ஈட்டியுள்ளது. இந்த காலாண்டின் நிகர லாபம் 188 கோடி. இது கடந்த காலாண்டைக் காட்டிலும் 8% சதவீதம் அதிகம். ஆனாலும் அடுத்து வரக் கூடிய மூன்றாம் காலாண்டில் மென்பொருள் வல்லுனர்களுக்கு தரப் படுகின்ற அதிக அளவிலான சம்பளத்தினால் லாபம் குறைய வாய்ப்பு இருப்பதாக அறிக்கை தெரிவித்தது. இந்த ஒரு செய்தியால் அதன் பங்குகள் கடுமையாக சரிவடைந்தது (25 ரூபாய் வீழ்ச்சி).

இது மட்டுமின்றி இன்று அறிக்கை தாக்கல் செய்த மற்ற மென்பொருள் நிறுவனங்களான போலாரிஸ், விசுவல் சாப்ட் போன்றவையும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாததால், மென்பொருள் பங்குகள் கடுமையாக சரிவடைந்தன

பஜாஜ் நிறுவனத்தின் அறிக்கையும் கடுமையான சரிவையே சந்தித்தது.

இன்று அறிக்கை தாக்கல் செய்து மிகுதியான லாபம் அடைந்த பங்கு குஜராத் அம்புஜா சிமெண்ட்.

நேற்று காளை, இன்று கரடி, நாளை ??

0 மறுமொழிகள்: