பங்குச்சந்தை

பொங்கு தமிழில் பங்குச்சந்தை குறிப்புகள்

சந்தை நிலவரம்

இன்றைய சந்தை நிலவரம்

துவக்கத்தில் ஏற்றத்துடன் தொடங்கிய வர்த்தகம், இறுதியில் சரிவடைந்தது. அனைத்து துறைகளிலும் நடந்த லாப விற்பனையால் BSE 5 புள்ளிகள் சரிவடைந்து 5682 என்ற நிலையிலும், NSE 9 புள்ளிகள் சரிவடைந்து 1786 என்ற நிலையிலும் முடிவடைந்தது.

மென்பொருள் பங்குகளும் லாப விற்பனையால் சரிவடைந்தது. பெட்ரோல் விலையை உயர்த்துவதில்லை என்ற மத்திய அரசின் முடிவு பெட்ரோல் நிறுவன பங்குகளை சரிவடைய செய்தது. ஆரம்பத்தில் முதலீட்டாளர்கள் உலோகப் பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். ஆனாலும் இந்த பங்குகள் இறுதியில் அதிக அளவிலான விற்பனையால் கீழ் நோக்கி சென்று விட்டது.

இன்றைய வர்த்தகத்தில் ஆரம்பத்திலிருந்தே லாபத்துடன் HDFC ன் பங்குகள் முன்னேறிக் கொண்டிருந்தது. லாபத்துடன் முடிந்த மற்றப் பங்குகள் - ICICI வங்கி, டாபர், BHEL.

இன்றைய வர்த்தகம் முழுமையாக கரடிகளின் ஆளுமையிலேயே இருந்தது.

0 மறுமொழிகள்: